Sage of Kanchi

எல்லாம் தெரியும்…செஞ்சுண்டே வா…போகப் போக எல்லாம் தெரிஞ்சுடும்

Thank you Sri Kannan for the share….

Periyava_sitting_with_rudraksha

அவருக்குக் கொஞ்ச நாட்களாகவே வேலைக்குப் போகப் பிடிக்காமல் ஒரு வித பயம் ஏற்பட்டது;
ஆஃபீஸ் செல்லப் பிடிக்காமல் வீட்டிலேயே இருக்கத் தோன்றியது. நாளடைவில் தூக்கமின்மையும்
சேர்ந்து கொண்டது. சில தினங்கள் முன்புதான் வேலையில் ப்ரமோஷன் வந்திருந்தது அந்தப்
பதவிக்கான வேலைகளை பொறுப்பாகச் செய்ய இயலவில்லை..மேலதிகாரிகள் அதெல்லாம்
ஒன்றுமில்லை கவலைப்படாதே என ஆறுதல் சொல்லி வந்தனர்.

தன் மனைவியிடமும், தாயார், தம்பியிடமும் ”நான் வேலைக்குப் போகமாட்டேன்..ஆனால்
அதனால் நம் குடும்பம் கஷ்டப்படுமே ”என்று மட்டும் சொல்லி வந்தார். வேலைக்கு லீவும்
எழுதிக் கொடுத்து விட்டார். அப்போது அவர் வயது முப்பத்தெட்டுதான்..

மனமுடைந்து போன மனைவி சில நண்பர்களின் யோஜனையின் பேரில் அவரைக் காஞ்சிபுரம்
அழைத்துச் சென்றாள். மனைவி பெரியவாளிடம் நடந்தவற்றை உருக்கமாக எடுத்துச் சொன்னாள்.

ஸ்ரீபெரியவா”நாளிக்கு பூஜைக்கு வா”என்றார்கள். அதன்படி மறு நாள் பூஜையில் சென்று அமர்ந்தனர்.
பூஜை முடிந்த பின் கைங்கர்யம் செய்பவர்களிடம் அபிஷேக ஜலத்தை அவர் தலையின் மேல் கொட்டி
ஸ்னானம் செய்விக்கச் சொன்னார்.

மறு நாள் இவர் ஸ்னானத்திற்கு செல்லும்போது, எட்ட இருந்த பெரியவா இவரைக் கூப்பிட்டார்.

”வேலைக்குப் போ ”என்று தம் கையில் இருந்த மரச் சொம்பில் எழுதிக் காண்பித்தார்.

”வேலையில் எனக்கு ஒன்றும் தெரியவில்லை” என்றார் இவர்.

”எல்லாம் தெரியும்…செஞ்சுண்டே வா…போகப் போக எல்லாம் தெரிஞ்சுடும்”

இதைச் சொல்லி கையில் இருந்த செம்பருத்தி புஷ்பத்தைச் சாப்பிடச் சொன்னார்.பின்”க்ஷேமமா இரு”
என அந்தக் கருணை தெய்வம் வாழ்த்தி அனுப்பினார்.

ஐந்தே ஐந்து நாட்களில் மாயாஜாலம் நிகழ்ந்தது! மனமாற்றம் ஏற்பட்டு, வேலையை ஒழுங்காக கவனிக்கத் தொடங்கினார். தூங்க ஆரம்பித்தார்! மஹாஸ்வாமிகள் எனும் மனோதத்துவ டாக்டரால் முடியாதது ஏதும் உண்டோ இப்பூவுலகில்!

அனுபவம்..திரு குஞ்சித பாதம் அவர்கள்

தகவல் கல்கி.

ஜய ஜய சங்கரா…..

Exit mobile version