பாடியவர்கள்;டாக்டர் கணேஷ்,ப்ருகா பாலு
கணேச சர்மா-மற்றும் பலர்.
இயற்றியவர்;கணேச சர்மா
தட்டச்சு;வரகூரான். நாராயணன்.
சம்பு சங்கரனுமாகி சந்திரசேகரனுமாகி காஞ்சியில் வந்தாரடி ..கிளியே
ஜகத்குரு ஆனாரடி..கிளியே ..
ஜகத்குரு ஆனாரடி
ஈடு இணை இல்லா பீடம் காஞ்சி காமகோடி பீடம் (தன்னில்)
அறுபத்திஎட்டாய் ..கிளியே
ஆண்டதுவோர் நூறு கண்டார் கிளியே
ஆண்டதுவோர் நூறு கண்டார்
அன்னை மகாலக்ஷ்மியும் தந்தை சுப்பிரமணியும்
செய்த பெரும் தவப்பயனாய் ..கிளியே
தாரணியில் அவதரித்தார் (கிளியே)
புண்ணிய ‘ஜய’ வருஷம் வைகாசி அனுஷமத்தில்
விழுமிய புரமதிலே… கிளியே
சுவாமிநாதனாய் பிறந்தார் (கிளியே)
பிஞ்சு பதிமூன்றாம் ஆண்டு குருவருள் கலவையில்
துறவறம் தானும் கொண்டார் ..கிளியே
சர்வக்ஞ பீடனும் ஆனார்..கிளியே
சர்வக்ஞ பீடனும் ஆனார்
பாதமது தானும் தேய கண்டவர் பிறவி மாய
காசினியை வளமும் வந்தார் ..கிளியே
கண்ணுக்கொரு விருந்துமானார் கிளியே
கண்ணுக்கொரு விருந்துமானார்
முத்தெனவே வாய்திறந்து அந்த உபதேசம் செய்து
வையமது அறவழியில் கிளியே
வையமது அறவழியில் கிளியே
வாழப்பெரும் வழியும் சொன்னார்
வந்தவர் வராதவரும் சொந்தமென தானும் கொண்டு
அள்ளி அள்ளி தானும் சென்றார்..கிளியே
அள்ளி அள்ளி தானும் சென்றார்..கிளியே
அருளை அவரிடத்தில்..
வேதமதும் கீதமதும் நூதன பலகலையும்
தன்னந்தனி ஓரிடமாய் ..கிளியே
தன்னந்தனி ஓரிடமாய் ..கிளியே
பாலர் என இவர் இருந்தார்
ஆதிஅந்தம் அதுமில்லா ஆனந்த பரம்பொருளாம்
காஞ்சி மஹா பெரியவரை கிளியே
என்றும் நெஞ்சில் வழிபடுவோம்..கிளியே
என்றும் நெஞ்சில் வழிபடுவோம்..கிளியே
என்றும் நெஞ்சில் வழிபடுவோம்
என்றும் நெஞ்சில் வழிபடுவோம்
Reply ↓

