From Sri BN Mama. Rest speaks for itself 🙂
மூர்த்தி உன்னைக் கண்டதில்லை
தீர்த்தம் உன் கையால் வாங்கவில்லை
நேர்த்திக்கடன் செய்வதென்ன
வார்த்தை ஒன்றால் சொல்லிடுவாய் !
காஞ்சீபுரம் செல்லவேண்டும்
அதிஷ்டானம் காணவேண்டும்
பிரதக்ஷிணம் பண்ணவேண்டும்
நமஸ்காரம் செய்யவேண்டும்
தினமும் அதையே நினைக்கின்றேன்
மனத்தால் உன்னை ஸ்மரிக்கின்றேன்
கணமும் உன் நாமம் நவில்கின்றேன்
எனக்கொரு வழியைப் பகன்றிடுவாய் !
‘பெரியவா கனவில் வந்தார்;
பெரியவா என்னிடம் பேசினார்
பெரியவா எனக்கு வில்வம் தந்தார்
பெரியவா கைப்பிடித்து அழைத்துச் சென்றார்’
பக்தர் பலரும் பகர்கின்றார்
என் கனவில் வருவாயோ
எனக்கொரு வாக்கு சொல்வாயோ
என் கை பிடித்து அழைப்பாயோ
எனக்கொரு வில்வம் தருவாயோ ?
ஐந்தில் வளையவில்லை
ஐம்பதில் வளையுமோ ?
எம்பெருமான் நீ வழியொன்று சொல்வாயே !
செம்பொன் வண்ணத்துச் செம்மலே எந்தன் குருவே !
கனவில் உன்னுருவம் காணவேண்டும்
நினைவில் உன் நாமம் சொல்லவேண்டும்
எனையும் நீயே ஆட்கொள்ளவேண்டும்—வேறு
குறையொன்றுமில்லை காமகோடி சங்கரா!
நாராயணன் பாலா.
29/04/15.
