Sage of Kanchi

122nd Jayanthi Celebration @Govindapuram Thapovanam

I am pleased to share the invitation from Govindapuram Thapovanam for Mahaperiyava Jayanthi celebration. All devotees in and around Kumbakonam – Please attend and receive the blessings of Mahaswami.

I have included a beautiful poem by Sri Suresh Krishnamoorthy (a.k.a Saanu Puthran)

“சங்கர குரோ சசி சேகர குரோ
காஞ்சி காமகோடி பீட சங்கர குரோ”
கண்ணாரக் கண்டவுந்தன் தவவனத்துத் தரிசனத்தின்
பலனாலே மெய்தேறிப் பாடுகின்றேன்!
மெய்ஞான பொருளுந்தன் அருளாசி கூட்டிவந்த
உறவான  நெஞ்சமதைப் போற்றுகின்றேன்!
“சங்கர குரோ சசி சேகர குரோ
காஞ்சி காமகோடி பீட சங்கர குரோ”
என்னாளும் எனையாளும் ஈசபரமேசன் உந்தன்
பண் நாளும் பாடிவரும் பாக்கியனானேன்!
தமிழன்னை வரமருள சொல்மாலை தொடுத்துன்னை
சிறந்தாழ்த்தி பணிந்தபடி பாடுகின்றேன்!
“சங்கர குரோ சசி சேகர குரோ
காஞ்சி காமகோடி பீட சங்கர குரோ”
எல்லாரும் எல்லாமும் என்றென்றும் பெற்றிடவே
பொன்னாரப் பாமாலை தொடுத்து வந்தேன்!
கல்லானின் மென்மனதில் வல்லோனுன் அருள்கூடி
நில்லாது கவிபாட துதித்து நின்றேன்!
“சங்கர குரோ சசி சேகர குரோ
காஞ்சி காமகோடி பீட சங்கர குரோ”
நெஞ்சார
குருவுண்டு பயமில்லை; குறையேதும் இனியில்லை!
பெரியவா கடாக்ஷம்
நமஸ்காரங்களுடன்
சாணு புத்திரன்.

Maha Periyava 122nd Jayanthi pathirikai 1

Exit mobile version