சிட்டியின் அனுபவம் தொடர்கிறது……
சென்னை வானொலியில் தலைமை நிருபர் பணிக்கு (இது மும்பை திரைப்பட ப் பணிக்கு சமமானது.)மாற்றும்படி கோரி நான் ஊழியனாய் இருந்த தகவல் ,ஒலிபரப்புத்துறைக்கு (டெல்லி) நான் விண்ணப்பித்துக்கொண்டேன். அந்த சமயத்தில்தான் ஆசாரியாள் அவர்களின் உரையை மொழி பெயர்க்கும் வாய்ப்பும் கிட்டியது. அந்த மொழிபெயர்ப்பை அங்கீகாரம் பெறுவதற்காக நான், சடகோபன், என் ஆஃபீசர் ஸ்ரீ நிவாசன் அவர்களுடன் காஞ்சி சென்றேன்.
அன்றைய இரவில் அவர் ஓய்வெடுக்கும் சமயம் இரவு ஒன்பது மணிக்கு எங்களை அழைத்தார். அவரிடம் இந்த மொழி பெயர்ப்பு பற்றி ப்ரஸ்தாபித்தபோது அது பற்றி பேசாமல் வழக்கம் போல் உலக விஷயங்களைப் பற்றி அளவளாவிக் கொண்டிருந்தார். ஒரு மணி நேரத்துக்குப் பின் உறங்கச் சென்றுவிட்டார்.
நாங்கள் பெரியவர் உத்தரவு கிடைகாததாலும், அவருக்கு அவர் உரையை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பதில் விருப்பமில்லையோ என்ற சந்தேகத்திலும், அன்று இரவு காஞ்சியிலேயே தங்கி விட்டு மறு நாள் காலையில் போய் படுத்து உறங்கி விட்டோம்.
மறு நாள் காலையில் மடத்து ஊழியர் ஒருவர் பெரியவர் எங்களை அழைப்பதாகச் சொல்லி எழுப்பினார். நாங்கள் அவசரமாக பல்தேய்த்து, கையில் அந்த ஆங்கில மொழி பெயர்ப்பு ப்ரதியையும் எடுத்துக்கொண்டு மடத்துக்குச் சென்றோம்.
என்னைப் பார்த்த பெரியவர் ”எங்கே போய்விட்டாய்? மடத்திலேயே படுத்துக் கொண்டிருக்கலாமே” என்று சொல்லி க் கொண்டே, மடத்தை விட்டு வெளியே நடந்தார்.
அவருடன் புதுப்பெரியவரும், இரண்டு சிஷ்யர்களும் உடனிருந்தார்கள்.
போகும்போது புதுப் பெரியவரிடம் ”எங்கே போகிறோம்” என்று கேட்டேன்.
அவர் சிரித்துக் கொண்டே”யாருக்குத் தெரியும் ” என்றார்.
காமக்ஷியம்மன் கோவிலைச் சுற்றிய தெருக்களில் நடந்து கொண்டே உலகாயதமாக பேசிக் கொண்டிருந்தாரே அன்றி என் மொழி பெயர்ப்பு பற்றி எதுவுமே பேசவில்லை. நாலௌ வீதிகளிலும் வலம் வந்தபின் கோவில் உள்ளே சென்று குளத்தில் ஸ்னானம் செய்ய ஆரம்பித்தார். புதுப் பெரியவரும் அவருடன் சென்று விட்டார்.
நானும், சடகோபனும் மேலே படிக்கட்டில் நின்று கொண்டிருந்தோம்.
அவர் கீழே ஸ்னானம் செய்தவாறே என்னிடம் அரசியல் பற்றியும் அப்போதுதகவல் ஒலி பரப்புத்துறை அமைச்சரான இந்திராகாந்தி பற்றியும் கேள்விகள் கேட்டுகொண்டே ஸ்னானத்தை முடித்துக் கொண்டார்.
எனக்கு நான் மேலே நின்று, அவர் கீழே இருந்து அண்ணாந்து பார்த்து கேட்கும் கள்விகளுக்கு விடை அளிக்க மிக சங்கடமாயிருந்தது. நான் அப்புறம் போய் நின்று கொள்கிறேன்” ஸ்வாமிகள் ஸ்நான அனுஷ்டானங்கள் முடித்தபின் வருகிறேன்” என்று அனுமதி பெற நினைத்தேன்.
”ஏன்” என்று அவர் கேட்டதற்கு என்ன சொல்வது என்று பதில் சொல்லாமல் இருந்ததைப் பார்த்து” நான் கீழே இருக்கேன், நீ மேலே நிற்கிறேன் என்றா, பரவாயில்லை, நீ அங்கேயே இரு ” என்று சொல்லி மேலும் அரசியல் பற்றி எல்லாம் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்.
ஸ்னானம் முடிந்த பின் ஜபம் முடித்து சிஷ்ய பரிவாரம் சூழ கோவிலுக்குள் சென்றார். சிட்டியைப் பார்த்து ”நீ வா ” என்று சைகை காண்பித்தார்.
புடுப் பெரியவாள் பெரியவருக்குப் பின்னால் சென்று கொண்டிருந்தார்;
அவரைத்தாண்டிப் போவதற்கு யோசிக்கும்போதுதான் ”நீ வா என்கிற உத்தரவு!”
புதுப் பெரியவர், ”நீரொம்பக் கொடுத்து வெச்சவன்’ என்று சொல்லி சிட்டிக்குப் போக வழி விட்டு அனுக்ரஹித்தார்.
அம்மன் சன்னிதிக்கு முன் ப்ரதிஷ்டை செய்திருந்த ஸ்ரீசக்ரத்தைக் காண்பித்து”இது பற்றித் தெரியுமா?” என்று கேட்டார்.
சிட்டிக்கு இது பற்றித் தெரிந்திருந்தும் தன் சிற்றறிவைப் பெரியவர் முன்பு வெளிப்படுத்த அஞ்சி, ”தெரியாது” என்று சொல்லி விட்டார்.
உடனே அர்ச்சகரைக் கூப்பிட்டு ஸ்ரீசக்ரத்தைப் பற்றி சிட்டிக்கு விளக்கும்படி சொன்னார். பின்னர் நடந்த அர்ச்சனையில் , ஆஅசாரியார்கள் இருவருடனும் காமாக்ஷி அம்மனையும் ஒருசேர காணும் பேறு கிட்டியது!
(யாருக்கு இப்படிப்பட்ட பாக்யம் கிடைக்கும்? அத்துடன் அவர் உத்தரவின் பேரில் ஸ்ரீசக்ரத்திற்கான விளக்கம் வேறு ! சிட்டி எத்தகைய பாக்ய சாலி!) மற்ற சன்னிதிகளிலும் வழிபட்டுவிட்டு, சிஷ்யர்களுடன், சின்னக் காஞ்சிபுரத்திலுள்ள மடத்தை நோக்கி நடக்கத் துவங்கினார். நாளை மேலே என்ன நடந்தது என்று பார்ப்போம்…
ஜய ஜய சங்கரா……
