Sage of Kanchi

சின்முத்ரை

Thanks to Smt Saraswathi Thyagarajan for FB posting….

Dakshinamurthy

ஒரு சதஸ் நடக்கிறது. ஒரு பண்டிதர் தக்ஷிணாமூர்த்தியின் சின்முத்ரையைப் பற்றி மூன்று மணினேரம் பேசினார்.

அது முடிந்ததும் பெரியவா அவரை ”எதைப் பற்றிப் பேசினாய்” என்று கேட்டார். சின்முத்ரையின் தாத்பர்யம் என்றார் அவர்.

ஒரு சின்முத்ரையில் இத்தனை விஷயமா? மூன்றுமணி நேரம் பேசினியே, எல்லாரும் புரிஞ்சிண்டாளா? என்றார்.

எல்லாரும் புரிஞ்சிண்டாளா என்று எப்படித்தெரியும்என்று பதில் சொன்னார் பண்டிதர். பெரியவா அதற்கு எல்லாரும் புரிஞ்சிக்கிறாளா என்பதை அவர்கள் முக பாவத்தைப் பார்த்தே தெரிஞ்சிக்கலாம், அது தெரியாமல் பேசிக்கொண்டே போவதில் என்ன பயன்?கேட்பவர் திறனை எடை போட்டுஅதற்குத் தகுந்தபடி பேசவேண்டும் என்று அறிவறித்தினார்.

பிறகு, ”நீ இப்போ சொன்னசின்முத்திரைக்கு நான் எனக்குத் தெரிந்த அர்த்தம் சொல்லட்டுமா”  என்று அடக்கமாகக் கேட்டுத் தொடங்கினார்.
அடுத்தவாளைக் காட்டும் ஆள்காட்டிவிரலும், நான் என த்தனித்து நிற்கும் கட்டைவிரலும் சேர்ந்து ”நானும் நீயும் ஒண்ணூதான்”என்று தக்ஷிணாமூர்த்தி ஸ்வாமி சொல்வதாகக் கொள்ளலாமா?” என்றார்.

கேட்ட பண்டிதர் அவர் காலடியில் விழுந்து ”இதுதான் சரியான பொருள்” என்று சொல்லி உருகினார். இனிமேல் நான் பேசக் கத்துக்கணும் எனக்கு சரியாக வெளியிடத் தெரியவில்லை;க்ஷமிக்கணும் ,அனுக்ரஹம் பண்ணணும் என்று வேண்டிக்கொண்டார்.

நன்றி: கணேச சர்மா”கருணைதெய்வம் காஞ்சி மஹான்”

Exit mobile version