Sage of Kanchi

An incident from Sri Manian

Thanks to Yogitha Jaishankar for FB posting…Rare_Periyava_Drawing

கவிஞர் வாலி ஒருமுறை என்னை மகா ஸ்வாமிகளைத் தரிசிக்க அழைத்துக் கொண்டு போனார். மகா ஸ்வாமிகளிடம் ஏதோ சில விளக்கங்களைக் கேட்டு பதில் பெற வேண்டும் என்பது அவருடைய விருப்பம். என்ன கேட்கப் போகிறாரோ என்று எனக்கு உள்ளூர ஆவல் குறுகுறுத்தது.

வாலி உள்ளே வந்தார். அவர்களுக்கு எதிரே ஒரு மூலையில் நின்று கொண்டார். ஒரு குழந்தையைப் போலத் தேம்பித் தேம்பி அழத் தொடங்கினார். எதுவுமே பேசவில்லை. தரிசனம் அப்படியே முடிந்தது.

வெளியே வந்ததும் அவரிடம், “என்ன ஆயிற்று? ஏன் அழுது கொண்டிருந்தீர்கள்?” என்று கேட்டேன்.

“செய்த பாவங்கள் எல்லாம் கண்முன்னே வந்தன. எனக்கு மனசு தாங்க வில்லை. குமுறி குமுறி அழுதேன்!” என்றார் வாலி. அப்புறம் அந்த அனுபவத்தை ஓர் அற்புதமான கவிதையாக எழுதிக் கொடுத்தார். ‘ஆனந்த விகடனில்’ அது பிரசுரமாயிற்று. அந்தக் கவிதை வரிகள் என் நினைவில் பசுமையாக இருக்கின்றன.

“பார்த்த மாத்திரத்தில் பாவத்தை
அலம்பிடும் தீர்த்தப் பெருக்கை
திருவாசகத்தின் உட்பொருளைக்
கூர்த்த மதியினை வேண்டிக்
கொண்டேன்!”

Exit mobile version