Site icon Sage of Kanchi

ABCD

I still need to learn this simple lessons 🙂

பெரியவாளின் மேனாவுக்கருகே ஒரு சின்ன பெண் குழந்தை வந்து நின்றது.

“பேர் என்ன?”

“தீபா” கீச்சு குரலில் குட்டி கூறியது.

“நீ சொன்னது எனக்கு கேக்கலியே! பலமா சொல்லும்மா”

அது அழுத்தந்திருத்தமாக ” D  for donkey , E for egg , இன்னொரு E for elephant , P for people ,A for ant ” என்றது.

பெரியவா “பேஷ் பேஷ் மகா கெட்டிக்காரியா இருக்கியே! பொளந்து தள்றியே!” என்று ஸ்லாகித்தார்.  அதுக்கு ஏக மகிழ்ச்சி.

சின்னஞ்சிறுசிடம் பென்னம்பெரியவர் ” நீ நன்னாதான் சொன்னே…..ஆனா ஒன் பேரோட “டாங்கி”யையும் “எக்”கையும் சேக்கறதுக்கு பதிலா, நான் இன்னூரு தினுசா சொல்லிதரட்டுமா?”….. ரொம்ப ஒசத்தியானவாளோட சேத்து சொல்லித்தரேன்.

D  for Devi . தேவின்னா என்ன தெரியுமா? ஒரே ஸ்வாமியே பல விதமா வருவார். அம்மாஸ்வாமியா அன்போட வரச்சே தேவின்னு பேரு. அம்மன் கோவில்ல பாத்திருக்கியோ?”

“ஒ பாத்திருக்கேன்”

“I  for Ilango ”

“அப்படீன்னா?”

“இளங்கோ.. ங்கறவர்தான் தமிழ்ல ரொம்ப ஒசத்தியான பொயட்ரிகதை எழுதினவர். அப்பாவை கண்ணகி கதை புஸ்தகம் வாங்கித்தர சொல்லு”

“P  for Prahlada ”

“தெரியும். தெரியும். பக்தியா இருந்த boy , அவனுக்காக God -ஏ சிங்கம் மாதிரி வந்து அவனுக்கு enemy -யா இருந்த father -ஐ kill  பண்ணினார்”

“பேஷ் பேஷ் நன்னா தெரிஞ்சு வெச்சுண்டிருக்கியே…….. கடைசியா, a  for anjaneyaa ..தெரியுமா?”

“உஹூம் ”

“ஹனுமார்”

“தெரியும். monkey god ”

“அவரேதான். கரெக்ட்டா சொல்லிட்டியே……இந்தாம்மா” கல்கண்டை குழந்தையிடம் வீசினார்.

எழுத்துக்களை அறியும்போது, மதத்திலும், இலக்கியத்திலும் பிடிமானம் ஏற்படுத்தி தர ஜகத்குருவின் சுவையான பாடம்.

Exit mobile version