Sage of Kanchi

“…அழுகையோட ஆத்துக்கு வந்துட்டேன்.”

அந்த காலத்திலே ஸ்ரீராமஜெயம் எழதின வாளுக்கு வெள்ளி காசு கொடுப்பா மகாபெரியாவா . நானும் ஒரு பத்து லக்ஷம் எழுதி அவா காலடி லே சமர்ப்பிக்க எண்ணினேன்.

மகாபெரியாவா மயிலாப்பூர் கேம்ப். முதல் நாளே போய் தர்சனம் பண்ணபோது ஒரே கும்பல். தள்ளி நின்னு பார்த்து நமஸ்காரம் பண்ணினேன். கையிலே இருந்த ஸ்ரீராமஜெயம் எழுதின நோட் எல்லாம் யாரோ ஒருத்தர் புடிங்கி நான் கொடுதுகறேன்னு சொல்லி அந்த வெள்ளி காசை வாங்கி தனக்கு வெச்சுண்டுட்டார். அழுகையோட ஆத்துக்கு வந்துட்டேன்.

மனசுல கிட்ட போய் நமஸ்காரம் பண்ண முடியலையே ன்னு ஆதங்கம்..மறு நாள் அவாள்டையே போய் கதற நினைச்சு கார்த்தாலே 5 மணிக்கு குளிச்சு வாசலே கோலம் போடா போனேன் . கோலம் போட்டுமுடிச்சு திரும்பி பார்த்த மாதவ பெருமாள் கோயில் குளத்துலே குளிக்க அந்த தெய்வம் என் ஆத்து வாசலே வந்தது .கண்ணுலே ஆனந்த கண்ணிரோட நமஸ்காரம் பண்ணேன். அன்னிக்கு சாயரட்சை மகாபெரியாவாளை தரிசனம் பண்ண போனேன்.மேடைலே என்னை கூப்பிட்டு ஒரு புடவை,தங்ககாசு,மாங்கல்ய சரடு வளையலாம் கொடுத்து ஸ்ரீ ராமஜயம் என்கிட்டே வந்துடுதுன்னு ஆசீர்வாதம் பண்ணா .

அப்புறம் தினம் 5 மாசத்துக்கு தரிசனம் ஆத்து வாசலே. தரிசனம் கொடுத்த கருணை கடல் மகாபெரியாவா.

******

Thanks a ton to Shri Kalyan who had posted this in Paramacharya group in Facebook. The blessed lady in the above incident is Shri Kalyan’s mother.

Exit mobile version