Site icon Sage of Kanchi

கார்த்திகை தீப தத்வம்

Ref : Arul Urai – 41, Page no 23, Vikatan Pathippakam:

கார்த்திகை பண்டிகையன்று நிறைய அகல் ஏற்றி வைக்கிறோமல்லவா? இப்படி தீபத்தை ஏற்றும்போது ஒரு ஸ்லோகமும் சொல்ல வேண்டும் என்று தர்ம சாஸ்திரத்தில் விதித்திருக்கிறது.

கீடாஹா:  பதங்காஹா: மசகாச்ச: வ்ருக்ஷாஹா :

ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவாஹா:!

த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜா

பவந்தி நித்யம் ச்வபசா ஹி விப்ராஹா:!!

‘புழுக்களோ பக்ஷிகளோ அல்லது ஒரு கொசுவஹத்தான் இருக்கட்டும். அந்தக் கொசுவோ நம் மாதிரி உயிரில்லை என்று நினைக்கப்படுகிற வ்ருக்ஷமோ, இன்னும் ஜலத்திலும் பூமியிலும் எத்தனை தினுசான ஜீவா ராசிகள் இருக்கின்றனவோ அவற்றில் எதுவானாலும் அதுவோ, மனுஷ்யர்களுக்குள்ளேயே பேதம் இல்லாமல் பிராமணனோ பஞ்சமனோ எவனானாலும் சரி  எதுவானாலும் சரி இந்த தீபத்தை பார்த்துவிட்டால் அந்த ஜீவனுடைய சகல பாபங்களும் நிவ்ருதியாகி இன்னொரு ஜன்ம எடுக்காமல் நித்யானந்தத்தில் சேரட்டும்’

என்று இந்த ஸ்லோகத்திற்கு அர்த்தம்

Exit mobile version