
ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 11:
ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாமம் 3 (தொடர்ச்சி):
மஹாலக்ஷ்ம்யை நம:
5) ஶ்ரீஸூக்தத்தினால் உபாஸிக்கப்படுபவள். ஶ்ரீதேவியின் பஞ்சதஶாக்ஷரி எனும் மஹாமந்த்ரம் ஶ்ரீஸூக்தத்தில் ஸூக்ஷ்மமாக விளங்குவதை ஸௌபாக்யலக்ஷ்மி கல்பம் கூறும்.
6) ஶ்ரீஸூக்தத்தினால் பலநூறு கோடி வருடங்கள் க்ஷீராப்தியில் ஶ்ரீமஹாலக்ஷ்மியினால் உபாஸிக்கப்பட்டவள் ஶ்ரீபவாநீ. பின்னர் மஹாலக்ஷ்மிக்கு தர்ஶனமளித்து மஹாலக்ஷ்மிக்கும் தனக்கும் அபேத பாவனையை உணர்த்தியவள்.
7) ஶ்ரீயந்த்ர பிந்துவில் விளங்கும் ஸமயம், ஶ்ரீவித்யா லக்ஷ்மியாய் ஜகதம்பா பவாநீ விளங்க, ,லக்ஷ்மிலக்ஷ்மி, மஹாலக்ஷ்மிலக்ஷ்மி, த்ரிஶக்திலக்ஷ்மிலக்ஷ்மி, ஸாம்ராஜ்யலக்ஷ்மிலக்ஷ்மி எனும் நான்கு வடிவங்களில் ஶ்ரீமஹாலக்ஷ்மித் தாயாரால் உபாஸிக்கப்படுபவள்.
ஸர்வம் லலிதார்ப்பணம்
காமாக்ஷி சரணம்
— மயிலாடுதுறை ராகவன்