ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் :
ஸகல புவனங்களுக்கும் ஈஶ்வரியான ஶ்ரீமாதா லலிதா மஹாத்ரிபுரஸுந்தரி பராபட்டாரிகையின் முக்யமான ஸஹஸ்ரநாமங்களுள் ஒன்று ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாமம்!!
தக்ஷிண தேசத்திலே ஶ்ரீரஹஸ்யநாம ஸாஹஸ்ரமான ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் விஶேஷமாக ஶ்ரீவித்யோபாஸகர்களிடத்தே விளங்குவது போலே, காஶ்மீர தேசத்து ஶ்ரீவித்யோபாஸகர்களால் அனுஸந்தானம் செய்யப்படுவது ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாமம்.
ருத்ரயாமள தந்த்ரத்தில் ஶ்ரீபரமேஶ்வர நந்தீஶ்வர ஸம்வாதமாய் விளங்குகின்றது. ஶ்ரீவித்யோபாஸனையின் ஸாரமாய் விளங்குவது.
அம்பாளின் அனுக்ரஹத்துடன் பூர்வோத்தர பாகத்துடன், ஆயிரம் நாமங்களுக்கும் விளக்கம் செய்யும்படியாக ஸங்கல்பம்.
இது பூரணமாக நிறைவேற ஶ்ரீபராஶக்தியிடம் ப்ரார்த்திக்கிறோம்.
ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாமம் முன்னுரை 1:
ShrI BhavanI SahasranAmA Introduction 1:
ஸர்வம் லலிதார்ப்பணம்
காமாக்ஷி சரணம்
— மயிலாடுதுறை ராகவன்
