Thanks to Brahmasri Kripashankar Ganapadigal, who studied Dharmasastram under Mullaivasal Brahmasri Krishnamoorthy Ganapadigal mama for sharing the first part of the post.
Thanks to Sri Guruvayurappan for sharing the second part of the post.
There is nothing more important for a human being than doing pitru karyam particularly during this most auspicious time for pitrus. If you are in India, please take advantage of the accessibility to sastrigals, things needed to do this etc etc and do it without cutting corners (compromising). Doing any shortcuts are only for emergency situation where one cannot do. Always, please wear masks etc for safety.
மஹாளய பக்ஷத்தை எப்படி செய்யவேண்டும்?
க்ருஷ்ணபக்ஷ ப்ரதமை முதல் ஶுக்லபக்ஷ ப்ரதமை வரை அதாவது (21ம்தேதி முதல் 07ம் தேதி வரை) 17 நாட்களும் திலதர்ப்பணமாக பக்ஷமஹாளயமாக செய்யவேண்டும்.
அல்லது முக்யமான புண்யதினங்கள்ம ஹாபரணீ.கபிலஷஷ்டி.மஹாவ்யதீபாதம்.மத்யாஷ்டமீ. அவிதவாநவமீ.ஏகாதஶீ.ஸன்யஸ்த மஹாளயம். கஜச்சாயை. ஶஸ்த்ரஹதம். அமாவாசை. போன்ற தினங்களிள் மட்டும் தர்ப்பணம் செய்யலாம்.
கடைசிபக்ஷமாக ஒருதினமாவது மஹாளயத்தை செய்யவேண்டும்.
1.தினமும் செய்வது (பக்ஷமஹாளயம்)
2.முக்யதினங்களிள் செய்வது (புண்யதின மஹாளயம்)
3.ஒருநாள் செய்வது (ஸக்ருன் மஹாளயம்)
புரட்டாசி.ஐப்பசி மாதங்களிள் அப்பா&அம்மா ஶ்ராத்தம் வந்தால் ஶ்ராத்தம் முடிந்து க்ருஷ்ணபக்ஷத்தில்
மஹாளயத்தை செய்யவேண்டும். இது ஒருநாள் மட்டும் மஹாளயம்
செய்பவர்களுக்கு மட்டும்.
பக்ஷ மஹாளயம் செய்பவர்கள் பஞ்சம அபர பக்ஷத்திலேயே தினமும் தர்ப்பணம் செய்யலாம்.
இவர்களுக்கு பிதா&மாதா ஶ்ராத்தங்கள் வந்தாளும் ஏதும் தடையில்லை
1.ஹோமத்துடன் செய்வது பார்வண மஹாளயம்
2.போஜனத்துடன் ஹிரண்யமாக செய்வது போஜனபூர்வ ஹிரண்யரூப மஹாளயம்
3.போஜனம் இல்லாமல் அரிசி.பாசிப்பருப்பு.வெல்லம்.காய்கறிகள்.தக்ஷினை போன்ற த்ரவ்யங்களை கொடுத்து செய்வது ஆமரூப மஹாளயம்.
இதில் நம் ஶக்திக்கு எப்படியெல்லாம் நம்மால் செய்ய முடியுமோ அதை மிக ஶ்ரத்தையாக செய்யவேண்டும்.
[மஹாளய பித்ருக்கள் வரிசை] 1.விஶ்வேதேவர்2.பித்ராதிகள் (அப்பா முதல் மூன்று) (தாயார் இல்லாதவர்களுக்கு மட்டும்)
3.மாத்ராதிகள் (அம்மா முதல் மூன்று)
4.மாதாமஹாதிகள் (அம்மாவின் அப்பா முதல் 6பேர்)
5.இரண்டுவம்ஶ காருணிக பித்ருக்கள்.
6.மஹாவிஷ்ணு
ஆக மொத்தம் 6 ப்ராஹ்மணாளுக்கு த்ரவ்யங்கள் தந்து செய்யவேண்டும்.
அப்பா இல்லாத அனைவரும் மஹாளயத்தை செய்யவேண்டும்.
17 நாட்களும் நியமமாக இருக்கவேண்டும்.
பித்ரு ஸம்பந்தமான கார்யங்களை மட்டும் செய்யவேண்டும்.
வபனம் செய்து கொள்ளக்கூடாது.
எண்ணெய் ஸ்னானம் செய்யக்கூடாது.
ஸ்த்ரீ ஸம்போகம் கூடாது.
வெளியில் எதுவும் சாப்பிடக் கூடாது.
ஆசாரமாக சமைத்து சாப்பிட வேண்டும்.
ஒருவேளை அன்னத்துன் சாப்பாடு ஒருவேளை அன்னமில்லாமல் சாப்பாடு என்ற ஆஹார கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டும்
மருந்து சாப்பிடுபவர்கள்சாப்பாட்டு நேரத்தைத்விர மற்ற நேரங்களில் பழம்.பால்.உப்பு இல்லாமல் கஞ்சி.
போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.தோஷமில்லை.
வெங்காயம்.பூண்டு.முருங்கை.கத்தரி.முள்ளங்கி.சுரைக்காய்.புழுங்கல் அரிசி. சேமியா. பாக்கெட்உணவு. வெளியில் உணவு. குளிக்காமல் சமைத்தஉணவு.இவைகள் கூடாது.
தினமும் மஹாளயம் செய்தாலும் ஒருநாள் மட்டும் மஹாளயம் செய்தாலும் 17 நாட்களும் நியமம் உண்டு.
Kirupashankara Ghanapatigal
9841013212
——————————————————————————————-
*மஹாளய பித்ரு ஆராதனை – குட்டி ஆராய்ச்சி*
*ஏன் இந்தப் பக்ஷத்தில் அநுஷ்டிக்கிறோம்*
நாம் எந்த எந்தக கார்யங்களைச் செய்யத் தவறவே கூடாது???
*देव पितृ कार्याभ्यां न प्रमदितव्यम्* என்கிறது வேதம்.. ஆதாவது (1) தேவ ஆராதனை, (2) பித்ரு ஆராதனை.
இந்த இரண்டு ஆராதனைகளுக்காக எல்லாவற்றையும் இரண்டு இரண்டாய் பிரித்தனர்.
*வருடம்* :::: (1)உத்ராயணம் தேவ ஆராதனைக்கு. (2)தக்ஷிணாயனம் பித்ரு ஆராதனைக்கு
*மாதம்:* (1)சுக்ல பக்ஷம் தேவ ஆராதனைக்கு, (2)கிருஷ்ண பக்ஷம் பித்ரு ஆராதனைக்கு.
*பகல்* ::: (1)முன் பாதி தேவ ஆராதனைக்கு, (2)பின் பாதி பித்ரு ஆராதனைக்கு. ( ச்ராத்தம்/தர்ப்பணம் எல்லாம் அபரான்ன காலத்தில்தான்)
*மனித உடல்* : (1)இடது பாகம் தேவாம்சம் (hence உபவீதி/ஸம்வீதம்) (2)வலது பாகம் பித்ரு அம்சம் (hence ப்ராசீன வீதி.
Ok
நமது வர்கத்வய பித்ருக்கள் மட்டுமன்றி, நமது ஸர்வ *காருணிக பித்ருக்களை* யும் விசேஷமாய் ஆராதிக்க நாம் ஆர்வப் பட்டால் எந்த நாட்களில் அந்த விசேஷ ஆராதனையைச் செய்யலாம்????
The obivous choice is (பித்ருக்களுக்கு உகந்த ) தக்ஷிணாயனம் & அதில் ஒரு ( பித்ருக்களுக்கு உகந்த) கிருஷ்ண பக்ஷம்.
தக்ஷிணாயத்தில் 6 கிருஷ்ண பஷங்கள் உள. எதைத் தேர்ந்து எடுப்பது?
நமது ரிஷிகள் தக்ஷிணாயத்தின் *முதல்* க்ருஷ்ண பக்ஷத்தை தேர்ந்து எடுத்த மஹாளய பக்ஷ ஆராதனை செய்தனர்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன் அத்தகு மஹாளாய பக்ஷம் (தக்ஷிணாயன *முதல்* கிருஷ்ண பக்ஷம்) சாந்தரமான பாத்ரபத மாஸத்தில் இருந்தது (Source:: ,*Orion, A Research into the antiquity of the Vedas*, BG Tilak)
Hence ரிஷிகள் அன்று செய்த பாத்ரபத க்ருஷ்ண பக்ஷத்தில் நாமும் இந்நாளிலே அதே பாத்ரபத க்ருஷ்ண பக்ஷத்தில் பித்ரு ஆராதனை செய்கிறோம்
ஆனால் இப்போது ( *அயனாம்ஸ* மாற்றத்தினால்) தக்ஷிணாயனம் (நிரயண) ஆஷாட மாதத்தில் வருகின்றது.
ஆஷாட கி. பக்ஷத்தில் அல்லவா நாம் இந்நாளில் இந்த மஹாளயம் அநுஷ்டிக்க வேண்டும்.??
ஆனால் பாத்ரபத கி.பக்ஷத்தில் அநுஷ்டிக்கிறோமே.!
இந்த வேறுபாடை நமது சாஸ்த்ர வல்லனுர்கள் எப்படிக் கையாளுகிறார்கள்??
மஹாளய ஸங்கல்பத்தில் முந்நாளைய ரிஷிகள் காலத்து தக்ஷிணாயன முதல் கிருஷ்ண பக்ஷத்திற்கும் இந்நாட்களில் நாம் காணும் தஷிணாயான முதல் கிருஷ்ண பஷத்திற்கும் இடடையே உள்ள *கால இடைவெளி* யைக் குறிக்கும் வாக்யங்களைச் சேர்த்துக் கொண்டனர்.
அதாவது
ஆஷாட கி.பக்ஷத்திற்கும் பாத்ரபத கி.பக்ஷத்திற்கும் கால இடைவெளி எவ்வளவு??
ஆஷாட கி.பக்ஷம்
ஶ்ராவண சு.பக்ஷம்
ஶ்ராவண கி.பக்ஷம்
பாத்ரபத சு.பக்ஷம்
பாத்ரபத கி.பக்ஷம்
கால இடைவெளி 5 பக்ஷங்கள்
Thus
ஆஷாட கி.பக்ஷத்திலிருந்து 5 வது பக்ஷத்தில் இந்த ஸத்கார்யம் செய்கிறோம் எனும் அர்தத்துடன் *ஆஷாடாத்* (ஆஷாடத்திலிருந்து)
*பஞ்சம* (5வது) *அபர பக்ஷ ப்ரயுக்த* (பக்ஷங்கள் பின்னால் அமைந்துள்ள ) *மஹாளய பக்ஷே* (மஹாளய பக்ஷத்தில்) என வார்த்தைகளை ஸங்கல்பத்தில் சேர்த்துக் கொள்கிறோம்.
Thus
ரிஷிகளின் மஹாளய மரபை மறக்காமால் அவர்கள் அநுஷ்டித்த பக்ஷத்திலேயே, அதே ஸமயத்தில் அயன மாற்ற நிகழ்வுகளையும் மறக்காமல் மனதில் கொண்டு மஹாளயம் அனுஷ்டிக்கிறோம்
கிருஷ்ணன்
ஶ்ரீ காஞ்சி கைங்கர்ய ஸபா
கோரேகான், மும்பை
