ஸ்ரீஅம்பிகையின் அதிசய பயணம் 1:
ShrI AmbA’s Journey for Her Child 1:
1) முக்தியளிக்கும் பவித்ர க்ஷேத்ரங்களில் மஹோத்தமமான ஸ்ரீகாமரூபம் எனும் ஸ்ரீகாமாக்யா க்ஷேத்ரம்.
2) ஆதிசக்தியாகும் ஸ்ரீலலிதாம்பிகை தசமஹாவித்யா ஸ்வரூபத்தில் ப்ரகாசிக்கும் மங்களமான க்ஷேத்ரம்.
3) காமாக்யா தேவியின் பரமபக்தரான ஸ்ரீரஹஸூ பகத் மஹிமை.
4) பஞ்சகாலத்தில் ஸ்ரீகாமாக்யா தேவியின் அருளால், ஆயிரக்கணக்கான மக்களுக்கு அன்னம் பாலித்த ரஹஸூபகத்.
5) மஹத தேச மன்னனின் பொறாமையும், ரஹஸூ பகத்தை சிறையிடலும்,
6) காமாக்யா தேவி தன் பக்தனுக்கருள, அன்னவாஹனத்தில் சாரதையாக புறப்பட்டு கல்கத்தாவில் தக்ஷிணகாலிகையாகவும்,
பாடலிபுத்திரத்தில் படீ பாட்டன் மாதா, சோட்டீ பாட்டன் மாதா எனும் ஸ்ரீஷோடஸி த்ரிபுரா மற்றும் ஸ்ரீபாலா த்ரிபுரா எனும் வடிவங்களிலேயும், ஹத்வாவில் ஸ்ரீஸம்பத்கரி எனும் ஹத்வா பவானியாகவும், க்ருஷ்ணகஞ்ஞில் ஸ்ரீஅச்வாரூடா எனும் கௌரீ பவானியாகவும், பின்னர் இறுதியில் தாவேவில் ஸிம்ஹம் பூட்டிய ரதத்தில் ஸ்ரீமஹாராஞ்ஞியாக மஹத மன்னன் தலையை அரிந்த, ஸ்ரீஅம்பிகா பவானியாக விளங்குதலும், ரஹஸூ பகத்திற்கு முக்தி அளித்தலும்,
7) மேற்கண்ட க்ஷேத்ரங்களின் விஷேஷம் அடுத்தடுத்த ப்ரவசனங்களில்,
ஸர்வம் லலிதார்ப்பணம்
காமாக்ஷி சரணம்
— மயிலாடுதுறை ராகவன்


