Site icon Sage of Kanchi

திருவாரூர் ஶ்ரீகமலாம்பாள் வைபவம்

YouTube Poster

ஶ்ரீவித்யா க்ஷேத்ர வைபவம் :

பராஶக்திபுரம் எனும் திருவாரூர் ஶ்ரீகமலாம்பாள் வைபவம் :

1) ஶ்ரீவித்யா ஸ்வரூபிணியாக கமலாலயத்தின் கரையில் விளங்கும் ஶ்ரீகமலாம்பாளின் மஹிமை.

2) சிதக்னியில் உதித்து, பண்டமஹாஸுரனை ஸம்ஹரித்து, காமேஶ்வரருடன் மந்த்ர ரத்ன ஸிம்ஹாஸனத்தில் வீற்றிருக்கும் ஶ்ரீகமலாம்பாளின் பராக்ரமம்.

3) தஶரதன் எனும் மஹாராஜன் வேட்டையாட திருவாரூர் வந்து, தாகம் தீர ஸரஸ்வதி தீர்த்தத்தை பருகுதலும், அவனது குளறுவாய் நீங்குதலும்.

4) பராஶக்தி ஊழியூழி காலமாய் யோகத்தில் வீற்றிருக்கும் யோகபீடம் விளங்கும் கமலாம்பாள் ஆலயத்தைக் காணுதலும், அறுபத்து நான்கு கலைகளும், வேதாகமங்களின் ஞானம் அவனுள் ப்ரகாசித்தலும்,

5) பராஶக்தியாகும் ஶ்ரீகமலாம்பாளைக் கண்டு வேதோக்த ஸ்துதிகளால் அம்மஹாராஜன் ஶ்ரீபராஶக்தியை துதித்தலும், ஶ்ரீகமலாம்பாள் ஶ்ரீலலிதாம்பிகையாக தஶரதனுக்கு காக்ஷியளித்தலும்,

6) தஶரத மஹாராஜனுக்கு ஶ்ரீகமலாம்பாள் அனுக்ரஹித்தலும், ஶ்ரீகமலைப்பராஶக்தியாகிய ஶ்ரீலலிதாம்பிகை அவனுக்கு மோக்ஷமளித்தலும்,

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்

Exit mobile version