ஶ்ரீகாமாக்ஷி அம்மை விருத்தம் 12:
மாயனது தங்கேயே பரமனது மங்கையே மயானத்தில் நின்ற உமையே
பராஸம்வித் வடிவான ஶ்ரீகாமாக்ஷி அம்பாள் லீலையாக ஶ்ரீநாராயணரின் ஸஹோதரியாக விளங்குகின்றாள். வாஸ்தவத்தில் ஶ்ரீமஹாவிஷ்ணுவிற்குத் தாயாராக அவரை ஈன்றவளானாலும், ஸஹோதரி பாவத்திலும் அம்பாள் விளங்குகின்றாள்.
போலே ஸம்வித் ரூபிணியான பராம்பாள் சித்சக்தியாகவும் சிவனாகவும் லீலையாக காமேஶ்வர காமேஶ்வரி ஸ்வரூபத்திலேயும் விளங்குகின்றாள்.
வாஸ்தவமாக பரமஶிவனாரும் மஹாவிஷ்ணுவும் இறுதியில் ஐக்யமடையும் ஸ்வரூபத்தினை உடையவளாக மஹா ஸ்மஶான நிலயாவாகவும் அம்பாள் விளங்குகின்றாள்.
ஸர்வம் லலிதார்ப்பணம்
காமாக்ஷி சரணம்
— மயிலாடுதுறை ராகவன்


