அபிராமி அந்தாதி மற்றும் அபயாம்பிகை சதகம் கூறும் ஸ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரி மஹிமை:
Greatness of ShrI LalitA TripureshwarI in AbirAmI AndhadhI and AbhyAmbikai Shatakam:
1) ஸ்ரீஅபிராமி அந்தாதி மற்றும் ஸ்ரீஅபயாம்பிகை சதகம் ஆகியவற்றின் நாற்பத்து நான்காவது செய்யுட்களின் சுருக்கமான விளக்கம்.
2) ஸ்ரீசக்ரத்தின் மத்ய பிந்து ஸ்தானமான நாற்பத்து நான்காவது கோணத்தைக் குறிக்கும், நாற்பத்து நான்காவது செய்யுட்களின் விளங்கும் ஸ்ரீபராம்பாளின் பரத்வம்
3) பரமசிவனையும் ஈன்று மறுபடி தனக்குள்ளே சேர்த்துக்கொள்ளும் ஸ்ரீவித்யா லலிதேச்வரியின் வடிவான அபிராமஸுந்தரி எனும் பரம பட்டாரிகையின் மஹத்வத்தை நாற்பத்து நான்காவது செய்யுளின் கூறும் ஸ்ரீஅபிராம பட்டர்
4) ஐம்பத்தோரு அக்ஷரவடிவாய் விளங்கி, ஆதிசக்தியாய், ஷோடசாந்த ஸ்தானத்தில் ப்ரகாசித்து, பரம வ்யோமத்தில் விளங்கி, நிர்விகல்ப ஸமாதியையும், கைவல்ய மோக்ஷத்தையும் வழங்கும் ஸ்ரீஅபயப்ரதாம்பாள் வைபவத்தை அபயாம்பிகை சதகத்தில், நாற்பத்து நான்காவது செய்யுளில் கூறும் ஸ்ரீஅபயாம்பிகை பட்டர்
5) சரியாக நாற்பத்து நான்காவது செய்யுளின் ஸ்ரீவித்யா ராஜதானியான காஞ்சிபுரத்தில் விளங்கும் ஸ்ரீகாமாக்ஷி லலிதா பராபட்டாரிகையை தங்கள் நூல்களில் குறிப்பிடும் ஸ்ரீஅபிராமி பட்டர் மற்றும் ஸ்ரீஅபயாம்பிகை பட்டர்.
ஸர்வம் லலிதார்ப்பணம்
காமாக்ஷி சரணம்
— மயிலாடுதுறை ராகவன்

