தியாகராஜ ஸ்வாமிகள் நாதோபாசனை மூலம் பகவானை அடைந்த ஒரு மஹான். தன் வாழ்நாள் முழுவதும் ஸ்ரீ ராம நாமத்தில் திளைத்து இருந்தார். “நிதி சால சுகமா ராமுநி சன்னிதி சேவ சுகமா நிஜமுக பல்கு மனஸா” (செல்வம் மிகுந்த இன்பத்தை அளிக்கக் கூடியதா?அல்லது ஸ்ரீ ராமனின் சன்னதியில் சேவை புரிவது சுகம் தருமா? மனமே! உண்மையாக இதைக் கூறுவாய்) என்று தன்னையே கேட்டுக்கொண்டு, செல்வத்தை உதறி, ஸ்ரீராமரை பெற்ற வைராக்யவான். முடிவில் சன்யாசத்தை ஏற்று தை மாதம் தேய்பிறை பஞ்சமி அன்று ஸ்ரீராமரின் திருவடிகளை அடைந்தார். இந்த பகுள பஞ்சமி அன்று இப்போதும் வருடா வருடம் திருவையாறு தியாகராஜ ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் ஆராதனை நடைபெற்று வருகிறது.
நமக்கும் அப்படிப் பட்ட பக்தி ஏற்பட என்ன செய்ய வேண்டும் என்று என் குருநாதர் பகிர்ந்த சில கருத்துகள் -> முகுந்தமாலா 33, 34 ஸ்லோகங்கள் பொருளுரை
Categories: Upanyasam
JAGADGURU SRI MAHA PERIYAVAA THIRUVADI SARANAM SARANAM
HARA HARA SANKARA JAYA JAYA SANKARA
OM SRI MATRE NAMAHA