பொள்ளாச்சி பாட்டி ஒரு தடவை பெரியவா கிட்ட “இவ்ளோ நாளா தர்சனம் பண்றேன். பெரியவா எனக்கு ஒரு அனுக்ரஹம் பண்ணனும்” னு சொல்றா. பெரியவா “அனுக்ரஹம்னா என்ன? நீ இன்னிக்கு கறிகாய் வாங்க போகும் போது, கத்திரிக்கா மலிவா கிடைச்சா அது தான் அனுக்ரஹமா? இப்படி மணிக்கணக்கா இங்க நிக்கறயே, இது அனுக்ரஹம் இல்லையா?” னு கேக்கறா. பெரியவா சன்னிதியில் நிற்பதே, அவருடைய தரிசனமே அனுக்ரஹம் என்று பாட்டி புரிஞ்சுக்கறா.
கோவிந்த தாமோதர ஸ்வாமிகளுக்கு பெரியவா நிறைய அனுக்ரஹம் பண்ணி இருக்கா. அதில் சிலவற்றை இங்கு பகிர்ந்துள்ளேன்.
கிருஷ்ணனுக்கே கிருஷ்ண கதை சொன்ன வைபவம்
நிரக்ஷர சிரோமணிம் மாம் பவித்ரய
கோவிந்த தாமோதர ஸ்வாமிகளுடைய ஆராதனை Feb 10 2021 திருச்சிக்கு அடுத்த பழுவூரில் ஸ்வாமிகள் அதிஷ்டானாத்தில் கொண்டாடப்படும்.
Categories: Upanyasam
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பூர்வாசிரமத்தில் மஹாபெரியவாளுக்கு கைங்கர்யம் செய்த ஸ்ரீ கண்டன் மாமா என நினைக்கிறேன்.தெரிந்தவர்கள் Sage of Kanchi or vaithy_bhel@yahoo.co.in இந்த மெயில் க்கு தெரிவிக்கவும்
இல்லை. கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பூர்வாசிரம பெயர் கல்யாணராம பாகவதர். ஶ்ரீ ஸ்ரீகண்டன் சுவாமிகளுக்கு உறவு