இன்று செப்டெம்பர் 5ம் தேதி. 2003ம் வருடம் செப்டெம்பர் 5ம் தேதி ஸ்வாமிகள் எனக்கு நாராயணீயத்தில் இருந்து “யோகீந்த்ராணாம் த்வதங்கேஷு” என்ற ஸ்லோகத்திற்கு விரிவாக அர்த்தம் சொல்லி, நாராயணீய தினத்தைப் பற்றியும் சொன்னார். அது அவர் எனக்கு அளித்த கடைசி உபதேசமாக அமைந்து விட்டது. ஏனென்றால், அவர் அந்த வருடம் நாராயணீய தினம் முடிந்து சில வாரங்களில் குருவாயூரப்பனின் திருவடிகளை அடைந்து விட்டார். அந்த உபதேசத்தில் என் நினைவில் உள்ளதை இங்கே பகிர்ந்துள்ளேன்.-> யோகீந்த்ராணாம் ஸ்லோகம் பொருள்
Categories: Upanyasam
Teacher student (தாங்கள்) also par excellence 🙏.ஸ்வாமிகள் தரிசனம் கிடைக்காத என் போன்றோருக்கு உங்கள் மூலம் அவரைப்பற்றி கேட்பது அவரே நேரில் கூறுவது போல் உள்ளது. இதுவரை பகவான் திருவடி நினைக்கும்போது பெரியவா திருவடிப்போல் மென் பஞ்சு பாதம் நினைவுக்கு வரும். இன்று முதல் குழந்தை திருவடியும் சேர்த்து நினைவு வரும். பெரியவாளிடம் ஸ்வாமிகள், ஸ்வாமிகளிடத்தில் தாங்கள் ,இருவரையும் சேர்த்து. எங்களுக்கு தங்களோடு அவர்கள் இருவரையும் சேர்த்து, அடியார்க்கு,அடியார்க்கு,அடியார்க்கு, அடியார்.🙏🙏🙏🙏
Guru namaskarams anna..thank u for sharing this with us..