குரு பூர்ணிமா 2020


நாளை குரு பெளர்ணமி. வியாஸ பௌர்ணமி. இந்த நாளில் ஸந்யாசிகள், வேதத்தை தொகுத்து, தர்ம சாஸ்திரங்களையும் புராணங்களையும் அளித்த வியாஸ முனிவரையும், ரிஷி மண்டலத்தையும், குரு மண்டலத்தையும் தியானித்து, விஸ்தாரமாக பூஜை செய்வார்கள். ஒவ்வொருவரும் அப்படி வியாஸ பூஜை செய்யும் தம்முடைய சம்பிரதாயத்தை சேர்ந்த குரு பீடங்களை அலங்கரிக்கும் மகான்களை தரிசித்து, ஆசி பெறுவார்கள்.

மேலும் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம், ஸ்ரீமத் பாகவதம், நாராயணீயம், திருப்புகழ் போன்ற ஸ்தோத்திர கிரந்தங்களை அருளிச்செய்த, சாசுவதமான புண்ணிய கீர்த்தியோடு விளங்கும் மகான்களையும், சங்கீதம், பரதம் போன்ற சாஸ்திரங்களை உபாஸித்து, மனத்தை உயர்த்தக்கூடிய கிருதிகளை இயற்றிய சங்கீத மும்மூர்த்திகள், கல்விமான்கள், கலைவாணிகள், அதோடு இவற்றையெல்லாம் ரக்ஷித்து நமக்கு அளித்த மஹாபெரியவாளையும், பெரியவா மூலமாக அகத்தூண்டுதல் பெற்று இவற்றை நமக்கு சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களையும், இந்த நாளில் நன்றியோடு வணங்குவோம்.

மஹாபெரியவாளின் குரல் முதன்முதலில் 1993ல் வெளியிடப்பட்டபோது “சிவசிவ பஶ்யந்தி ஸமம்” என்ற மூகபஞ்சசதீ சுலோகத்துக்கு பெரியவா பொருள் கூறின அந்த உபன்யாசம் தான் வெளிவந்தது. ஜகத்குருவின் அந்த அமிர்த வாக்கைக் கேட்டு பலர் அவருக்கு மாணவர்கள் ஆனார்கள். பெரியவாளை நேரில் தரிசிக்கத் முடியாதவர்கள் கூட, இந்த வாக்கை கேட்டவுடன், இது தெய்வ வாக்கு, காமாக்ஷியின் குரல் என்று உணர்ந்து கொள்வார்கள். பலமுறை கேட்டு இருந்தாலும் இன்னொரு முறை கேட்போம். இந்த ஒலிப்பதிவில், “காமாக்ஷியின் கடாக்ஷத்தை பெற்ற மகாபுருஷர்கள் எப்படி இருப்பார்கள்? அதற்கு அடையாளம் என்ன?” என்று பெரியவா விளக்குகிறார். அந்த ஒலிப்பதிவையும், அந்த அடையாளங்களோடு விளங்கிய மகாபுருஷர் மஹாபெரியவாளே தான் என்று மூன்று நிகழ்ச்சிகள் மூலம் விளக்கும் என் உரையையும் இந்த இணைப்பில் கேட்கலாம்.–> சிவசிவ பஶ்யந்தி ஸமம் ஸ்ரீ காமாக்ஷீ கடாக்ஷிதா: புருஷா:



Categories: Upanyasam

Tags: , ,

9 replies

  1. On ghe occassion of Guru Purnima my daughter Kum.Swetha Gayathri recited Totakashtakam which is available here. Please bless her…https://youtu.be/ZT5uYuRdq_I

  2. JAGADGURU SRI MAHA PERIYAVAA THIRUVADI SARANAM SARANAM

  3. Thank you very much for your kind information. Mr.Ganapathi subramanian

  4. This Sunday, 5-Jul, is Vyasa Purnima, also known as Guru Purnima. Shri Vyasacharya’s contribution to Sanatana Dharma is unparalleled – to Him we owe the compilation of Vedas into Rk, Yajur, Sama and Atharva, 18 Puranas, Mahabharatam and many more granthas! With the blessings of Sri Sri Periyava(s), the following PDFs are being released to outline the greatness of Vyasacharya, and provide a simple pUjA paddhati to worship Vyasacharya, and celebrate our great Guru Parampara:

    https://bit.ly/vdsp-vyasa-purnima-devanagari
    https://bit.ly/vdsp-vyasa-purnima-tamil (diacritics ²³⁴)
    https://bit.ly/vdsp-vyasa-purnima-grantham
    https://bit.ly/vdsp-vyasa-purnima-hindi
    https://bit.ly/vdsp-vyasa-purnima-telugu
    https://bit.ly/vdsp-vyasa-purnima-malayalam
    https://bit.ly/vdsp-vyasa-purnima-kannada
    https://bit.ly/vdsp-vyasa-purnima-tamil-grantha (tamil + grantha consonants)

    Jaya Jaya Shankara! Hara Hara Shankara!

  5. நாளை தேனம்பாக்கத்தில் நமது பாலபெரியவா அனுஷ்டிக்கும் வியாசபூஜை – சாதுர்மாஸ்ய விரதம் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா ? கொரோனா
    ஊரடங்கால் எங்களால் நேரில் வரமுடியவில்லை .நேரடி ஒளிபரப்பு செய்தால்
    எங்களால் பார்க்கமுடியும்

Leave a Reply

%d bloggers like this: