இன்று ஆனித்திருமஞ்சனம். சிதம்பரத்தில் நடராஜாவின் அபிஷேகத்தை இன்று காண்பது விசேஷம்.
குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,
பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும்,
இனித்தம் உடைய எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மாநிலத்தே! என்று அப்பர் பெருமான் நடராஜாவின் தூக்கிய திருவடியை கண்டதால் மனித பிறவிக்கும் ஒரு பொருள் கிடைத்து விட்டது என்று ஆனந்தப் படுகிறார்.
எல்லா மகான்களும் இறைவனின் திருவடிகளைப் பற்றிக் கொண்டால் அது மனக்கவலைகளை மாற்றும், பயத்தைப் போக்கும் என்று பாடியிருக்கிறார்கள். சிவானந்த லஹரியில் ஆச்சார்யாள் பரமேஸ்வரனின் பாதங்களை பற்றிக்கொண்டு, கண்ணீர் உகுத்து, நெஞ்சோடு அணைத்து, தலைமேல் தாங்கி உருகும் ஒரு ஸ்லோகத்தின் பொருளை விரிவாக பார்ப்போம்.
–> சிவானந்தலஹரி 26வது ஸ்லோகம் பொருளுரை
Categories: Upanyasam
JAGADGURU SRI MAHA PERIYAVAA THIRUVADI SARANAM SARANAM
OM NAMASIVAYA SIVAYA NAMHA OM