Thanks to Sri Ganapathy Subramanian for this wonderful share. I am happy to share this with you all on guruvaram.
“அப்படியா! அம்பாள் பக்தனா நீ” Periyava said to Sri Govinda Damodara Swamigal! Why? Read this…..
நம் கோவிந்த தாமோதர ஸ்வாமிகளுக்கு ஸ்தோத்ரங்கள் மீது ரொம்ப பக்தி, ப்ரியம். கணேஷ பஞ்சரத்னம், சுப்ரமண்ய புஜங்கம் முதல் ஹனுமத் பஞ்சசரத்னம் வரை எல்லா ஸ்தோத்ரங்களையும் விரும்பி கேட்பார். கற்றுக் குடுப்பார். நிறைய பாராயணம் பண்ண ஊக்கம் அளிப்பார். எந்த கஷ்ட நிவர்த்திக்கும் ஸ்தோத்ர பாராயணத்தை அவர் அதிகம் உபதேசம் செய்வார். ஸ்தோத்ர பாராயணம் எளிமையாக இருந்தாலும் அது பண்ணும் அனுக்ரஹம் ரொம்ப பெரிசு என்பது அவருடைய வாழ்க்கையில் அவர் கற்ற அனுபவ பாடம். அவருடைய நம்பிக்கையும் அதனால் ஏற்பட்டதே.
நாமெல்லாம் மணிக்கணக்காக நாவல் (fiction) படிப்பதைப் போல் ஸ்வாமிகள் சிறிய வயது முதற் கொண்டே ஸ்தோத்ரங்கள், ராமாயணம் போன்றவற்றை எடுத்து கொண்டு போய் படித்துக் கொண்டு இருப்பாராம். அவருடைய சித்தி தேடிக் கொண்டு வந்து “கொழந்தே! சாப்பிடலயே டா… மணி நாலாகப் போறதே” என்று சொல்லி அழைத்துக் கொண்டு போய் சாப்பாடு போடுவாராம். அப்படி ராமாயணத்தில் மூழ்கி அதை வாசித்து அனுபவித்து இருக்கிறார். பத்து வயதிலேயே அதை பிரவசனமும் செய்து இருக்கிறார். அப்படி அவருக்கு பிறவியிலேயே சம்ஸ்க்ருத பக்தி கிரந்தங்கள் புரிந்தது. அதை அனுபவிக்கவும் தெரிந்தது.
Read more here – http://valmikiramayanam.in/?p=3247
Categories: Devotee Experiences
Very pleasant to hear about Both Periyava
English translation please