It was great talking to Sri Ganapathy this morning and learnt about the parallels he drew with Mahaperiyava….
முகுந்தமாலைல நேத்தி ஒரு அழகான ஸ்லோகம் பார்த்தோம்.
வாத்ஸல்யாத் அபயப்ரதானஸமயாத் ஆர்தார்த்திநிர்வாபணாத்
ஔதார்யாத் அகஷோஷனாத் அகணிதஷ்ரேயபதப்ராபணாத் |
ஸேவ்ய: ஸ்ரீபதிரேக ஏவ ஸததம் ஸந்த்யத்ர ஷட்ஸாக்ஷிண:
ப்ரஹ்லாதஸ்ச விபீஷணஸ்ச கரிராட் பாஞ்சால்யஹல்யா த்ருவ: ||
ன்னு பகவானுடைய ஆறு குணங்கள். வாத்ஸல்யம், அபயப்ரதானம், ஆர்த்தார்த்தி நிர்வாபணம், கஷ்டப்படறவாளோட துக்கத்தை போக்கறது, ஓளதார்யம் – தயாளகுணம், அகஷோஷணம் பாபங்களை போக்குவது, அகணித ஸ்ரேய: பதப்ராபணம் – நினைக்க முடியாத உயர்ந்த பதவியை அருளுவது இப்பேற்பட்ட குணங்கள் கொண்டவன் பகவான். அதற்கு ப்ரகலாதனும், விபீஷணனும், கஜேந்திரனும், பாஞ்சாலியும், அகல்யாவும், த்ருவனும் முறையே சாக்ஷி, அதனால அப்பேற்பட்ட அந்த ஸ்ரீயப்பதியான ஸ்ரீமன் நாராயணனையே நாம் சேவிக்க வேண்டும், வேறுஒரு மனிதர்களை போய் சேவிக்கக் கூடாது அப்படிங்கிற ஸ்லோகத்தை நேத்தி பார்த்தோம். எனக்கு இந்த ஒவ்வொரு குணத்தை பார்த்த போது, இந்த பாகவனோட குணங்கள் அப்படீன்னு, இங்க குலசேகர ஆழ்வார் சொல்றதெல்லாம் நம்ம மஹா பெரியவா கிட்டயும் இருந்தது அப்படீன்னு தோணித்து.
மஹா பெரியவாளோட நேரா பழகினவா சொன்ன அனுபவங்கள் எல்லாம் கேட்கற பாக்கியம் நமக்கு இந்த கடந்த பத்து வருஷங்களா நிறைய கிடைச்சுருக்கு.
[continue reading this article here …]
Categories: Devotee Experiences
Leave a Reply