அபிராமி அந்தாதியும் – காமகோட்டமும்

Kamakshi_Acharyas

Thanks to Smt Geetha Sami for this article as heard from a devotee…

அபிராமி அந்தாதியும் – காமகோட்டமும் என்ற தலைப்பில் ஒரு சிறு புத்தகம் பிரசுரிக்க ஸ்ரீ பெரியவர்கள் விரும்பினார்கள். அதற்குச் சில தினங்கள் முன் ஒரு நாள் என்னை வரும்படி உத்தரவு வந்தது.

நான் தர்சனம் செய்து கொண்டபோது , அவர்கள் ” அபிராமிபட்டர் அநேகமாக முழுக்க, காமாக்ஷியைப் பற்றி, அவருடைய அந்தாதியில் பாடியிருக்கிறார் தெரியுமா ?”, என்றார் . நான் ” இல்லையே ! அபிராமி பற்றித்தான் பாடியிருக்கிறார் ” என்றேன். 

ஸ்ரீ பெரியவர்கள் ,”அபிராமி அவருக்கு அபிமான தேவதை ஆனால் உபாசனா தேவதையான காமாக்ஷியைப் பற்றித்தான்
பெரும்பாலும் பாடியிருக்கிறார் என்று ஊகித்துப் பார்த்தால் சில பாடல்களிலிருந்து தெரியும் . “எப்படின்னு தெரியுமா?
என்று சொல்லியபின், அபிராமி அந்தாதியிலிருந்து ஒரு பாட்டை சொன்னார்கள் .

துணையும், தொழும் தெய்வமும் பெற்ற தாயும், சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்-பனி மலர்ப்பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே.

இந்தப் பாட்டில் சொல்லியிருக்கும் ஆயுதங்கள் எல்லாம் திருக்கடையூர் அபிராமி அம்பாளின் கையில் இல்லை .
இந்த ஆயுதங்கள் கூடிய திரிபுர சுந்தரியின் கருஞ்சிலா மூர்த்தி காஞ்சியில் உள்ள காமாக்ஷியைத் தவிர வேறு எங்குமில்லை. ”

பிறகு பெரியவர்கள் ” காமாக்ஷி எந்த ஆசனம் போட்டு உட்கார்ந்திருகிறாள்?” என்று கேட்டபோது , நான் “பத்மாசனம் ” என்றேன்.

அதற்கு பெரியவர்கள் ” இல்லை “யோகாசனம்” என்று கூறி தானே யோகாசனம் போட்டு காட்டினார்கள் . பிறகு “இந்த யோகாசனத்தில்
இருபாதங்களும் ஒன்றாக இணையும் . சுக்ஷும்னா நாடி தானாக மேலே கிளம்பும். அம்பாள் கோவிலில் காமாக்ஷி , ஆச்சார்யாள் ,
துர்வாசர் ஆகிய மூன்று மூர்த்திகளுமே யோகாசனத்தில் தான் இருகின்றன” என்று சொல்லி பெரியவர்கள் என்னை அழைத்து
போய் காட்டினார்கள் .



Categories: Devotee Experiences

Tags:

6 replies

  1. ஒன்றை பற்றி சொல்லும்போது மகாபெரியவா கூட இரண்டு மூன்று சாட்சிகளையும் காண்பிப்பது அவருக்கே உரிய தனி சிறப்பு .adey

  2. This is very interesting……..I had a dream about three weeks ago……..I was attending a temple kumbhabhishekam……..I saw and heard Mahaperiya va singing the last sloka of abirami andhadi……which runs as follows….aathalai andamellam poothalai……….I could not understand the connection……….now I see it………..

  3. Since Our Mahaperiyava is Kamatchi whether will he not be aware

  4. Periyava Padhangal Saranam –

  5. Maha Periyava ThiruvadigaLee CharaNam! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

  6. This was revealed to late Sri kamakoti Shastrigal, Stahnikar of Sri Kamakshi amman temple, Kanchipuram.Shastrigal was initiated into Shaktham by Sri Chidanandha Natahr ( Sir) Sri Nedimindi Subramania Shastrigal and was given the diksha namam ‘Balananda Natha’ as Periyava said to Śir’ ” indha kuzhandaikku” give upadesam- initiatioṇ.

Leave a Reply

%d bloggers like this: