Sri Sundaramurthi Swamigal’s Pathigam

I believe this handout was given to me at Sri Matham by HH Pudhu Periyava along with kungumam etc. This pathigam was written by Sri Sundaramurthi Swamigal and chanting this will remove all difficulties for home, country etc… Unfortunately, this can’t be translated to English….

Pasupatha_Paranjudare1

Pasupatha_Paranjudare2



Categories: Bookshelf

Tags:

7 replies

  1. Literal Line-by-Line English Rendition

    Beauty, bod(il)y-material, and wealth for-myself-your
    tinkling-ornament-possessing Feet, as deeming
    (any-)one respecting-not cavalier-acts performing
    feigning-displeasure (for my spouse) strong-one-as wander-(with other females)-will-I
    Fragrance-abiding flower-garden surrounding
    Thirumullaivaayil-seeking-out-you mouth-by you
    extolling humble-servant-self experiencing-sorrow weed-out
    O, the Lord of souls, the Supreme Light !!!

    Lucid English Rendition

    I will wander as a strong one, with females other than my spouse, having feigned displeasure for her, performing cavalier acts, respecting not anyone, and deeming for myself, beauty, bodily material and wealth, as your tinkling-ornament-possessing Feet.

    O, the Lord of souls, the Supreme Light !!! You, the One seeking out fragrance-abiding- flower-garden-surrounding Thirumullaivaayil, weed out the sorrow experienced by
    humble-servant-self extolling you by mouth….

    Aum Sivaaya

  2. Thiruchchitrambalam

    வடதிருமுல்லைவாயில்

    பாடல் எண் : 1

    திருவும்மெய்ப் பொருளுஞ் செல்வமும் எனக்குன்
    சீருடைக் கழல்கள்என் றெண்ணி
    ஒருவரை மதியா துறாமைகள் செய்தும்
    ஊடியும் உறைப்பனாய்த் திரிவேன்
    முருகமர் சோலை சூழ்திரு முல்லை
    வாயிலாய் வாயினால் உன்னைப்
    பரவிடும் அடியேன் படுதுயர் களையாய்
    பாசுப தாபரஞ் சுடரே

    பொழிப்புரை :

    தேன் பொருந்திய சோலைகள் சூழ்ந்த திருமுல்லை வாயிலில் எழுந்தருளியிருப்பவனே , உயிர்களைக் காப்பவனே , மேலான ஒளியாய் உள்ளவனே , வீட்டின்பமும் , அதனைத் தருகின்ற மெய்ப்பொருளும் , இம்மையிற்பெறும் செல்வமும் எல்லாம் எனக்கு உனது புகழையுடைய திருவடிகளே என்று மனத்தால் நினைத்து , பிறர் ஒருவரையும் துணையாக நினையாது , அவர்களைப் பற்றாமைக்கு ஏதுவாகிய செயல்களையே செய்தும் , அவர்கள் என்னைப் பற்ற வரின் , பிணங்கியும் உன்னிடத்து உறைத்த பற்றுடையேனாய்த் திரி வேன் ; வாயினாலும் உன்னையே பாடிப் பரவுகின்ற அடியேனாகிய யான் படுகின்ற துன்பத்தை , நீ நீக்கியருளாய் .

    குறிப்புரை :

    ` திரு ` என்பது , இப்பொருளதாதல் , ` போகமும் திருவும் புணர்ப்பானை ` ( தி .7 ப .59 பா .1) என்றதனாற் பெறப்பட்டது . ` செல்வமும் ` என்றே போயினாரேனும் , ` அதனால் அடையும் இம்மை இன்பமும் ` என்பதும் கொள்ளப்படும் . ` சீருடைக் கழல்கள் ` என்றார் , வேண்டுவார் வேண்டுவதை ஈந்து புகழ் பெறுதலின் , ` வாயி னால் ` எனப் பின் வருகின்றமையின் , ` மனத்தி னால் ` என்பது பெறப் பட்டது . ` ஒருவரை மதியாது உறாமைகள் செய்தும் ஊடியும் உறைப் பனாய்த் திரிவேன் ` என்றது , இவ்வுறைப்பினால் ` இப் பிழையை நீ பொறுத்துக்கொள்வாய் எனத் துணிந்து செய்தேன் ` என்பதும் , ` பரவிடும் அடியேன் படுதுயர் களையாய் ` என்றது , ` அங்ஙனம் பொறாது என் கண்ணைக் கெடுத்தது , அறவோனாகிய நினக்கு ஏற்புடைத்தாயிற்றேயெனினும் , யான் என் பிழையை உணர்ந்து உன்பால் குறையிரந்து நின்றபின்பாயினும் , அதனைப் பொறுத்து , எனக்கு அக்கண்ணை அருளித்தருளல் வேண்டும் ` என்பதும் குறிப்பித்தவாறாம் . இன்னும் , ` உன்னையன்றி வேறு பற்றில்லாத அடியவர்படும் துன்பத்தைக் களையாது கண்டு கொண்டிருத்தல் அருளுடையோனாகிய உனக்குத் தகுவதோ ` என்பது , இத்திருப்பதிகம் முழுவதினும் காணப்படுவதாம் . ` ஒருவரையும் ` என்னும் இழிவு சிறப்பும்மை , தொகுத்தலாயிற்று . ` பாசுபதன் ` என்றது , ` பசுபதி ` என்பது , பகுதிப் பொருள் விகுதிபெற்று நின்றவாறு .

    பாடல் எண் : 2

    கூடிய இலயஞ் சதிபிழை யாமைக்
    கொடியிடை உமையவள் காண
    ஆடிய அழகா அருமறைப் பொருளே
    அங்கணா எங்குற்றாய் என்று
    தேடிய வானோர் சேர்திரு முல்லை
    வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
    பாடிய அடியேன் படுதுயர் களையாய்
    பாசுப தாபரஞ் சுடரே

    பொழிப்புரை :

    உன் தேவியாகிய கொடிபோலும் இடையினை யுடைய உமையவள் கண்டு மகிழுமாறு , பல திறங்களும் கூடிய கூத் தினை , தாளவொற்றுப் பிழையாதவாறு ஆடுகின்ற அழகனே , அரிய வேதத்தின் முடிந்த பொருளாய் உள்ளவனே , கருணையாகிய அழகினையுடைய கண்களையுடையவனே , ` இறைவனே , நீ எங்குள் ளாய் ?` என்று தேடிய தேவர்கள் , நீ இருக்கும் இடம் அறிந்து வந்து சேர் கின்ற திருமுல்லை வாயிலில் எழுந்தருளியிருப்பவனே , உயிர்களைக் காப்பவனே , மேலான ஒளியாய் உள்ளவனே , உனது திருப்புகழைப் பலவிடங்களிலும் சென்று விருப்பத்தோடே பாடிய அடியேன் , மேலும் அங்ஙனமே பாடுதற்கு , யான் படுகின்ற துன்பத்தை நீ நீக்கியருளாய் .

    குறிப்புரை :

    ` எல்லாவகை நடனங்களும் அமைய ஆடினாய் ` என்பார் , ` கூடிய இலயம் ` என்று அருளினார் . ` உமையவளை மகிழ் விக்க , நடனத்தை நன்கு ஆடுபவனாகலின் , சங்கிலியை வருத்திய என் பிழையைப் பொறுத்திலை ` என்பது திருக்குறிப்பு . ` பாடிய ` என்றதனை , ` செய்த ` என்னும் பெயரெச்சமாகவும் , ` செய்யிய ` என்னும் வினையெச்சமாகவும் , இரட்டுற மொழிந்துரைக்க . ` அற்சனை பாட்டே யாகும் ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக ` ( தி .12 தடுத் . புரா . 70) என்று நீ பணித்தவாறே தலங்கள் பலவற்றிற்கும் சென்று உனது திருப் புகழைப் பாடினேன் ; இனியும் அவ்வாறு இடரின்றிச் சென்று , உனது திருமேனியைக் கண்களாரக் கண்டு இன்புறும்வழியே பாடுதல் உளதாவதாம் ; ஆதலின் , என் கண்ணைக் கொடுத்தருளல் வேண்டும் என வேண்டியவாறாம் .

    பாடல் எண் : 3

    விண்பணிந் தேத்தும் வேதியா மாதர்
    வெருவிட வேழம்அன் றுரித்தாய்
    செண்பகச் சோலை சூழ்திரு முல்லை
    வாயிலாய் தேவர்தம் அரசே
    தண்பொழில் ஒற்றி மாநக ருடையாய்
    சங்கிலிக் காஎன்கண் கொண்ட
    பண்பநின் அடியேன் படுதுயர் களையாய்
    பாசுப தாபரஞ் சுடரே

    பொழிப்புரை :

    விண்ணுலகம் வணங்கித் துதிக்கின்ற அந்தணனே , மனையாள் கண்டு நடுக்கங் கொள்ளுமாறு அன்று யானையை உரித்து , அதன் தோலைப் போர்த்துக் கொண்டவனே , சண்பக மரங்களின் சோலை சூழ்ந்துள்ள திருமுல்லைவாயிலில் எழுந்தருளியிருப்பவனே , தேவர்களுக்குத் தலைவனே , தண்ணிய சோலைகளையுடைய திருவொற்றிமாநகரை உடையவனே , சங்கிலியின் பொருட்டு என் கண்ணைப் பறித்துக்கொண்ட செப்பமுடையவனே , உயிர்களைக் காப்பவனே , மேலான ஒளியாய் உள்ளவனே , உன் அடியேன் படு கின்ற துன்பத்தை நீக்கியருளாய் .

    குறிப்புரை :

    ` உன் மனைவியை நீ வெருவச் செய்தாயாயினும் , என் மனைவி வருந்தப் பொறுத்தாயல்லை ` என , அவனது திருவருளைப் புகழ்வார் , ` மாதர் வெருவிட வேழம் அன்று உரித்தாய் ` என்றும் , ` சங்கிலியும் என்போலவே உன்னையன்றி வேறு அறியாத தொண்டி னளாதலின் , அவள்பொருட்டு நீ இது செயற்பாலையே ` என்பார் . ` சங்கிலிக்கா என்கண் கொண்ட பண்ப ` என்றும் அருளிச் செய்தார் . சுவாமிகள் இங்ஙனம் , இறைவனது செப்பத்தினைச் சிறப்பித்தோதிய வதனானே , சேக்கிழார் , ` சங்கிலிக் காகஎன் கண்களை மறைத்தீர் என்று சாற்றிய தன்மையிற் பாடி ` ( தி .12 ஏ . கோ . பு . 277) என்று , இதனை விதந்தோதியருளினார் . இங்ஙனம் சங்கிலியாரது திருத்தொண்டினை ஏற்று நிற்கும் நிலைமையை நினைத்தலின் , ` ஒற்றி மாநகருடையாய் ` என்றும் ஓதினார் . ` சண்பகம் ` என்னும் வடசொல் , ` செண்பகம் ` எனத் திரிந்து வருதல் வழக்கு .

    பாடல் எண் : 4

    பொன்னலங் கழனிப் புதுவிரை மருவிப்
    பொறிவரி வண்டிசை பாட
    அந்நலங் கமலத் தவிசின்மேல் உறங்கும்
    அலவன்வந் துலவிட அள்ளற்
    செந்நெலங் கழனி சூழ்திரு முல்லை
    வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
    பன்னலந் தமிழாற் பாடுவேற் கருளாய்
    பாசுப தாபரஞ் சுடரே

    பொழிப்புரை :

    பொன்போலும் நெல்லைத் தருகின்ற நல்ல அழகிய வயல்களில் , புள்ளிகளையும் , கீற்றுக்களையும் உடைய வண்டுகள் புதிய நறுமணத்தை நுகர்ந்து இசையைப் பாட , அந்த நல்ல அழகிய தாமரை மலராகிய படுக்கையின்மேல் கிடந்து உறங்குகின்ற நண்டு , அந்த இசை நின்றபொழுது விழித்தெழுந்து வந்து உலாவுகின்ற அத்தன்மையதான சேற்றையுடைய செந்நெல்லையுடைய அழகிய வயல்கள் சூழ்ந்த திருமுல்லை வாயிலில் எழுந்தருளியிருப்பவனே , உயிர்களைக் காப்பவனே , மேலான ஒளியாய் உள்ளவனே , உனது திருப்புகழை விருப்பத்தோடு , பல நலங்களையும் உடைய தமிழால் பாடுவேனாகிய எனக்கு அருள்செய்யாய் .

    குறிப்புரை :

    ` பொன் ` உவமையாகுபெயர் . ` வண்டுகளின் இசையைக் கேட்டு , நண்டு , தாமரை மலராகிய படுக்கையின்மேல் உறங்கும் ` என்பதும் , ` புதுமணம் நீங்கிய பின்னர் வண்டுகள் இசை யொழிதலும் , நண்டு எழுந்து உலவும் ` என்பதும் இதன்கண் அமைந் துள்ள அணிந்துரைகள் . ` உலவிட வள்ளல் ` என்பது பாடமெனின் , ` அவ் வள்ளல் ` என்னும் , வகரம் தொகுக்கப்பட்டதாக உரைக்க . ` நலத்தமிழ் ` என்பது , மெலிந்து நின்றது .

    பாடல் எண் : 5

    சந்தன வேருங் காரகிற் குறடுந்
    தண்மயிற் பீலியுங் கரியின்
    தந்தமுந் தரளக் குவைகளும் பவளக்
    கொடிகளுஞ் சுமந்துகொண் டுந்தி
    வந்திழி பாலி வடகரை முல்லை
    வாயிலாய் மாசிலா மணியே
    பந்தனை கெடுத்தென் படுதுயர் களையாய்
    பாசுப தாபரஞ் சுடரே

    பொழிப்புரை :

    சந்தன மரத்தின் வேரையும் , கரிய அகிலினது கட்டையினையும் , மென்மையான மயில் இறகினையும் , யானையின் தந்தத்தையும் , முத்துக் குவியல்களையும் , பவளக் கொடிகளையும் மேல் இட்டுக்கொண்டும் , பக்கங்களில் தள்ளியும் வந்து பாய்கின்ற பாலியாற்றின் வடகரைக்கண் உள்ள திருமுல்லைவாயிலில் எழுந் தருளியிருப்பவனே , மாசில்லாத மணி போல்பவனே , உயிர்களைக் காப்பவனே , மேலான ஒளியாய் உள்ளவனே , எனது பாவத்தைத் தொலைத்து யான் படுகின்ற துன்பத்தை நீக்கியருளாய் .

    குறிப்புரை :

    சந்தன மரத்தை அடியோடு பெயர்த்துக் கொணர்தலைக் குறிக்க , ` வேரும் ` என , அதனையே குறித்தருளினார் . தண்மை , இங்கு மென்மை மேற்று , ` குவைகள் ` என்றது இருமருங்கிலும் அவற்றை உளவாக்குதல் நோக்கி , ` பாலி வடகரை ` என்றதனான் , இத்தலம் , வடதிருமுல்லைவாயிலாதல் பெறப்பட்டது . பத்தாந் திருப்பாடலாலும் இது பெறப்படுவதாம் .

    பாடல் எண் : 6

    மற்றுநான் பெற்ற தார்பெற வல்லார்
    வள்ளலே கள்ளமே பேசிக்
    குற்றமே செயினுங் குணமெனக் கொள்ளுங்
    கொள்கையான் மிகைபல செய்தேன்
    செற்றுமீ தோடுந் திரிபுரம் எரித்த
    திருமுல்லை வாயிலாய் அடியேன்
    பற்றிலேன் உற்ற படுதுயர் களையாய்
    பாசுப தாபரஞ் சுடரே

    பொழிப்புரை :

    மாற்றாது வழங்கும் வள்ளலே , வானத்தில் ஓடுகின்ற முப்புரங்களைப் பகைத்து எரித்தவனே , திருமுல்லை வாயிலில் எழுந்தருளியிருப்பவனே , உயிர்களைக் காப்பவனே , மேலான ஒளியாய் உள்ளவனே , யான் பொய்யையே பேசி , குற்றங் களையே செய்தாலும் அவைகளை நீ குணங்களாகவே கொள்ளும் அளவிற்கு உனது பேரருளைப் பெற்றேனாகலின் , யான் பெற்ற பேறு , மற்று யார் பெற வல்லார் ! அத்திருவருட் சார்பை நினைந்தே யான் குற்றங்கள் பலவற்றைச் செய்தேன் ; அது , தவறுடைத்தே . ஆயினும் , அது நோக்கி என்னை நீ கைவிடுவையாயின் , அடியேன் வேறொரு துணை இல்லேன் ; ஆதலின் , அடியேனை அடைந்த துன்பத்தை நீ நீக்கியருளாய் .

    குறிப்புரை :

    கள்ளம் , ` உனக்கு ஆளல்லேன் ` என்றதும் , தவநெறி வேண்டிய பின்னும் பரவையாரை விரும்பியதும் . குற்றம் செய்தது , ` பித்தன் ` எனப் பலர்முன் இகழ்ந்தது , பொன் வேண்டுங்கால் ஏச்சுரை களாகப் பாடியது போல்வன . இவைகளை இறைவன் குற்றமாகக் கொள்ளாது , மகிழ்வுற்றமை யறிக . ` மிகை பல ` என்றது , மற்றொரு மாதரைத் தருமாறு வேண்டியது முதலாக , சூள் பிழைத்தமை ஈறாகச் சங்கிலியாரது திருமணத்தில் நிகழ்ந்தவை . ` எல்லாவற்றையும் பொறுத்த நீ , இச்சூள் பிழைத்தது ஒன்றனையும் பொறாதொழிந்தது , அது நின் அடியவட்கு இழைத்த பெருந்தீங்காதல் பற்றி என்பதனை யான் இப்பொழுது உணர் கின்றேன் ` என்பார் , ` மிகைபல செய்தேன் ` என்றும் , ` இதுதான் பொறுக்கலாகாத குற்றமே எனினும் , இது பற்றி எனக்கு நீ முன்செய்த திருவருளையெல்லாம் மறுத்துவிடுவையாயின் , யான் கெட்டொழிவ தன்றி உய்யேன் ` என்பார் , ` அடியேன் பற்றிலேன் உற்றபடுதுயர் களை யாய் ` என்றும் அருளிச்செய்தார் .

    பாடல் எண் : 7

    மணிகெழு செவ்வாய் வெண்ணகைக் கரிய
    வார்குழல் மாமயிற் சாயல்
    அணிகெழு கொங்கை அங்கயற் கண்ணார்
    அருநடம் ஆடல்அ றாத
    திணிபொழில் தழுவு திருமுல்லை வாயிற்
    செல்வனே எல்லியும் பகலும்
    பணியது செய்வேன் படுதுயர் களையாய்
    பாசுப தாபரஞ் சுடரே

    பொழிப்புரை :

    அழகு பொருந்திய சிவந்த வாயினையும் , வெள்ளிய பற்களையும் , கரிய நீண்ட கூந்தலையும் , சிறந்த மயில் போலும் சாயலையும் , அணிகலங்கள் பொருந்திய கொங்கைகளை யும் , அழகிய கயல்போலும் கண்களையுமுடைய ஆடல் மகளிர் அரிய நடனங்களை ஆடுதல் நீங்காததும் , செறிந்த சோலைகள் சூழ்ந்ததும் ஆகிய திருமுல்லைவாயிலில் எழுந்தருளியிருக்கும் செல்வனே , உயிர்களைக் காப்பவனே , மேலான ஒளியாய் உள்ளவனே , இரவும் பகலும் உனக்குத் தொண்டு செய்வேனாகிய யான் படுகின்ற துன்பத்தை நீக்கியருளாய் .

    குறிப்புரை :

    ` மணிகெழு ` என்றது , நகை கூந்தல்களோடும் இயை யும் . இவ்வாறன்றி , ஏற்புழிக் கோடலால் , பவளமும் முத்துமாக உரைத்து , ` வாய் , நகை ` என்பவற்றோடே இயைத்து , ` கெழு , உவம உருபு ` என்றலுமாம் . ` அங்கயற்கண்ணார் ` என்றது , பெயர்த் தன்மைத் தாய் , வாய் முதலியவற்றோடு தொக்கு நின்றது , ` அறாத , தழுவு ` என்ற வற்றை , தனித்தனி , ` திருமுல்லைவாயில் ` என்றதனோடு இயைக்க . இரவை முன்னர் , அருளினார் , ` அது பணி ஒழியுங்காலமாக . அப் பொழுதும் ஒழியாது செய்வேன் ` என்றற்கு .

    பாடல் எண் : 8

    நம்பனே அன்று வெண்ணெய்நல் லூரில்
    நாயினேன் றன்னைஆட் கொண்ட
    சம்புவே உம்ப ரார்தொழு தேத்துந்
    தடங்கடல் நஞ்சுண்ட கண்டா
    செம்பொன்மா ளிகைசூழ் திருமுல்லை வாயில்
    தேடியான் திரிதர்வேன் கண்ட
    பைம்பொனே அடியேன் படுதுயர் களையாய்
    பாசுப தாபரஞ் சுடரே

    பொழிப்புரை :

    யாவராலும் விரும்பத் தக்கவனே , அன்று திரு வெண்ணெய்நல்லூரில் வந்து , நாய்போன்றவனாகிய என்னை ஆட் கொண்ட சம்புவே , வானுலகத்தவர் வணங்கித் துதிக்கின்ற , பெரிய கடலில் உண்டான நஞ்சினை உண்ட கண்டத்தையுடையவனே , உன்னைத் தேடித் திரிவேனாகிய யான் , செம்பொன்னால் இயன்ற மாளிகைகள் நிறைந்த திருமுல்லைவாயிலில் கண்ட , பசிய பொன் போல்பவனே , உயிர்களைக் காப்பவனே , மேலான ஒளியாய் உள்ள வனே , அடியேன் படுகின்ற துன்பத்தை நீக்கியருளாய் .

    குறிப்புரை :

    ` தடங்கடல் நஞ்சுண்ட கண்டன் ` என்பது , ஒரு பெயர்த் தன்மைத்தாய் , ` ஏத்தும் ` என்ற எச்சத்திற்கு முடிபாயிற்று . அவ் வெச்சமும் , ` கண்ட ` என்ற எச்சமும் செயப்படு பொருட் பெயர் கொண்டன .

    பாடல் எண் : 9

    மட்டுலா மலர்கொண் டடியிணை வணங்கும்
    மாணிதன் மேல்மதி யாதே
    கட்டுவான் வந்த காலனை மாளக்
    காலினால் ஆருயிர் செகுத்த
    சிட்டனே செல்வத் திருமுல்லை வாயிற்
    செல்வனே செழுமறை பகர்ந்த
    பட்டனே அடியேன் படுதுயர் களையாய்
    பாசுப தாபரஞ் சுடரே

    பொழிப்புரை :

    தேன் பொருந்திய மலர்களைக் கொண்டு உனது திருவடியிணையை வழிபடுகின்ற மாணவன்மேல் , அவன் பெருமையை எண்ணாமலே அவனைக் கட்டிப் போதற்கு வந்த இயமனை , அவன் இறக்கும்படி அவனது அரிய உயிரைக் காலால் அழித்த மேலோனே , செல்வத்தையுடைய திருமுல்லை வாயிலில் எழுந்தருளியிருக்கின்ற செல்வனே , சொல்வளமும் , பொருள்வளமும் உடைய வேதங்களைச் சொன்ன ஆசிரியனே , உயிர்களைக் காப்ப வனே , மேலான ஒளியாய் உள்ளவனே , அடியேன் படுகின்ற துன்பத்தை நீக்கியருளாய் .

    குறிப்புரை :

    ` செல்வம் ` என்றன இரண்டும் , பொருட் செல்வத்தையும் , அருட்செல்வத்தையும் குறித்தன . இறைவனுக்குப் பொருட் செல்வமாவன , எல்லா உயிர்களும் , எல்லா உலகங்களும் ஆகிய அடிமைகளும் , உடைமைகளுமாம் .

    பாடல் எண் : 10

    சொல்லரும் புகழான் தொண்டைமான் களிற்றைச்
    சூழ்கொடி முல்லையாற் கட்டிட்
    டெல்லையில் இன்பம் அவன்பெற வெளிப்பட்
    டருளிய இறைவனே என்றும்
    நல்லவர் பரவுந் திருமுல்லை வாயில்
    நாதனே நரைவிடை ஏறீ
    பல்கலைப் பொருளே படுதுயர் களையாய்
    பாசுப தாபரஞ் சுடரே

    பொழிப்புரை :

    சொல்லுதற்கரிய புகழை
    யுடையவனாகிய , ` தொண்டைமான் ` என்னும் அரசன் , எல்லையில்லாத இன்பமாகிய பேரின்பத்தைப் பெறுமாறு அவனது யானையை , படர்ந்துகிடந்த முல்லைக் கொடியால் தடுத்து , பின்னர் அவனுக்கு வெளிப்பட்டருளிய இறைவனே , எந்நாளும் நல்லவர்கள் போற்றுகின்ற திருமுல்லை வாயிலில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே , வெள்ளை விடையை ஏறுபவனே , பல கலைகளின் பொருளாயும் உள்ளவனே , உயிர்களைக் காப்பவனே , மேலான ஒளியாய் உள்ளவனே , அடியேன் படுகின்ற துன்பத்தை நீக்கியருளாய் .

    குறிப்புரை :

    இஃது இத்தலத்தில் , இறைவன் வெளிப்பட்டருளிய வரலாற்றினை எடுத்தோதி யருளியது . அவ்வரலாறாவது , ` இத்தலம் உள்ள நாடாகிய தொண்டை நாட்டை ஆண்ட , ` தொண்டைமான் ` என்னும் அரசன் வேட்டைக்குச் சென்றபோது அவனது யானையின் காலில் சுற்றிக்கொண்ட முல்லைக் கொடியை அவ் யானை அறுத்துச் செல்ல மாட்டாது நிற்க , அரசன் சினந்து அக்கொடியை , தனது வாளினால் வெட்டி விலக்கியபோது , உள்ளே சிவலிங்கம் இருத்தலைக் கண்டு மகிழ்ச்சியுற்று வணங்கி , திருக்கோயில் எடுத்தல் முதலிய திருப் பணிகளைச் செய்தான் ` என்பது , இதனை இத்தல புராணத்துட் காண்க .

    பாடல் எண் : 11

    விரைதரு மலர்மேல் அயனொடு மாலும்
    வெருவிட நீண்டஎம் மானைத்
    திரைதரு புனல்சூழ் திருமுல்லை வாயிற்
    செல்வனை நாவல்ஆ ரூரன்
    உரைதரு மாலைஓர் அஞ்சினோ டஞ்சும்
    உள்குளிர்ந் தேத்தவல் லார்கள்
    நரைதிரை மூப்பும் நடலையும் இன்றி
    நண்ணுவர் விண்ணவர்க் கரசே

    பொழிப்புரை :

    நறுமணத்தைத் தருகின்ற தாமரை மலர்மேல் இருக்கின்ற பிரமனும் , திருமாலும் அச்சங் கொள்ளும்படி , அவர்கள் முன் தீப்பிழம்பாய் நீண்டு நின்றவனாகிய , அலைகளை வீசுகின்ற கடல்நீர் சூழ்ந்த திருமுல்லைவாயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை , திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரன் பாடிய பாடல்களாகிய பத்தினையும் , மனம் குளிர்ந்து பாட வல்லவர்கள் , நரையும் திரையும் மூப்பும் சாக்காடும் இன்றி , தேவர்களுக்கு அரசராகும் நிலையை அடைவர் .

    குறிப்புரை :

    ` மூப்பும் ` என உம்மை கொடுத்துப் பிரித்து , நடலையை வேறு ஓதினமையால் , அஃது இறப்பாயிற்று . நடலை – துன்பம் . அஃது அப் பெருந்துன்பத்தைக் குறித்தது . ` அரசு ` என்றது , அரசராகும் தன்மையை என்க
    Thiuchchitrambalam.

    Credit: http://thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=7&Song_idField=7069 Thanks to them.
    Om Nama Shivaaya! Jaya Jaya Shankara, Hara Hara Shankara!

  3. Thirumullaivaayil Thiruppathigam by Sundarar! On Sri Kodiidainaayakgi Sametha Sri MasillamaNiiswarar . the Deity at Thirumullaivaayil./ Close to Ambattur Bus Stand. A little away, on Avadi Road, one can see Sri VaishNavi Shrine, which will be marked by a Thorana Vaasal on the Road. At MaasilaamaNiiswarar Temple, one can see the rare ‘Erukkuth ThooNs’ made of divine Vellerukku!, on either side of the shrine. Jaya Jaya Shankara, Hara Hara Shankara!

  4. Dear Mahesh.

    In Periyapuranam. Sekkizhar Swami explains the sequence of events.

    At Thirovotriyur Sundar marries Sangili and makes a plege/promise not to leave Thiruvotriyur. But he is so fond of Tiruvarur Lord. So he leaves the place and Lord takes his eye sight.

    He cries and feels sad. He leaves. On the way, people are helping him to reach Thirumullaivaayil. (Vada thirumullai vaayil). There he sings this song. He says explicitly in the second song of the pathigam, ‘Oh Lord, Great, you took my eye sight for the sake of Sangili’…

    Then he goes to Thiruvenbaakkam, where Lord offers him a Walking Stick…

    From there he reaches to Thiruvegambam(Kanchipuram) and Lord gives back one eye and the other one he gets at Thiruvaroor.

    This is the story…

    http://thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=12&Song_idField=1229

    Sri Ganesa Sarma Mama told in one of his upanyasams how Aiyan treated an engineer about this.

    The same is in Darsana Anubavangal book also.

    https://www.facebook.com/photo.php?fbid=735349759843525&set=gm.612528642148935&type=1&theater

    The full Pathigam with Tamil meaning…

    http://thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=7&Song_idField=7069

    Thiruchitrambalam.

    பாசுபதா பரமாச்சாரிய சுடரே போற்றி…

  5. Great piece of information.
    I think it was 1988 or 1987. (immediately after the Kumbabhishegam of Chidambaram Natarajar Koil).
    During one of my monthly visits for Maha Periavaa’s Darshan at Kancheepuram, Pradosham Mama told that Maha Periavaa had asked about the Thevaram’s with the phrase ‘Paasupatha’. He was earnestly searching for this in all the Thevarams and was also enquiring every devotee coming to his Home. After a month or two, Pradosham Mama, when I visisted his Home, asked me to chant this Padhigam (Given Above) daily keeping in mind the Lotus Feet of Maha Periavaa. He asked me to chant it till my son was born (my wife was pregnant then and the delivery was supposed to be a tough one) . Of Course it is needless to add that my son was born without any problem (a very normal delivery) with the Blessings of Sri Maha Periavaa. I just thought that I should share my experience with you on this Padigam.

  6. can you, kindly, share more of the author [sri sundara murthy swamigal] and approximately when sri pudu periyava gave it and to whom…….. jaya jaya sankara hara hara sankara

    • Maybe I did not understand the question properly. Sri Sundaramurthi Swamigal, one of the nayanmars, is also called as “Sundarar”, who is none other Lord Parameswara Himself. I don’t know when this pathigam was composed by Him. A printed sheet of this pathigam is still being given to devotees by HH Pudhu Periyava when you get darshan. That is what I meant.

Leave a Reply to drsundaramCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading