பெரியவாளின் ஞான த்ருஷ்டி சம்பவம்

Thanks to Shri Varagooran, FB for typing….

காஞ்சிப்பெரியவர் புனே அருகில், ஒரு மலையடிவார கிராமத்தில் முகாமிட்டிருந்தார். அங்கு திருவெண்காட்டைச் சேர்ந்த ஜெயராமன் வந்தார். அவரிடம் பரிவுடன், “”இந்த சின்ன கிராமத்திற்கு கூட வந்திருக்கியே. பரம சந்தோஷம்! ஒவ்வொரு நாள் காலை பூஜையின்போது நீ தீட்சிதர் கீர்த்தனைகளைப் பாடு. நாங்கள் எல்லோரும் கேட்கவேண்டும்,” என்றார்.

ஜெயராமனுக்கு பூரிப்பு. ஒருநாள் வெள்ளிக் கிழமை பூஜை… பூஜை முடிந்ததும் சுக்கிரவார கீர்த்தனையைப் பாடத்தொடங்கினார் ஜெயராமன். அன்று யாருக்கும் பெரியவர் பிரசாதம் கொடுக்கவில்லை. ஜெயராமனுக்கு மட்டும் பிரசாதம் கொடுத்து சென்னைக்கு கிளம்பிச் செல்ல உத்தரவிட்டார்.

பெரியவர் கண்டிப்பாக சொன்னதும் ஜெயராமனுக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் பெரியவர் சொல்வதில் ஏதோ உள்ளர்த்தம் இருக்கும் என்று மனதிற்கு தோன்றியது. மறுவார்த்தை பேசாமல் சென்னை சென்றுவிட்டார். வீட்டுக்கு வந்ததும் அவரது குருநாதர் மதுரை மணிஐயர் வீட்டிலிருந்து உடனே வரும்படி அழைப்பு வந்தது.

குருநாதருக்கு ஏதோ அவசரம் என்பதை உணர்ந்த ஜெயராமன் அவரது வீட்டுக்குக்குச் சென்றார். இரண்டு நாட்கள் இரவும் பகலும் குருநாதர் அருகில் இருந்து சேவை செய்தார். மதுரை மணி ஐயர் இறைவனடி சேர்ந்தார். தன் குருநாதரின் இறுதிக்காலத்தில், அவருக்கு சேவை செய்யும் பாக்கியத்தை அளிப் பதற்காகவே பெரியவர் தன்னை சென்னை அனுப்பினார் என்பதை அறிந்த ஜெயராமனின் உள்ளம் உருகியது.



Categories: Devotee Experiences

Tags:

12 replies

  1. padikkumbothe udambu pullarikkuthu. hara hara sankara, jaya jaya sankara

  2. D K Jeyaraman was not a sishya of Madurai Mani Iyer as far as I know.

  3. Maha Periyava Blessed both the Guru and the disciple. KaruNya Murthy! Jaya Jaya Shankara, Hara Hara Shankara!

  4. capturing the heart

  5. periava anugraham is immense.

  6. ஏற்கெனவே எங்கேயோ படிச்ச நினைவு. என்றாலும் மீண்டும் படித்து மகிழ்ந்தேன். நன்றி.

  7. RADHE KRISHNA. HARA HARA SANKARA, JAYA JAYA SANKARA. HARA HARA SANKARA, JAYA JAYA SANKARA. HARA HARA SANKARA, JAYA JAYA SANKARA. HARA HARA SANKARA, JAYA JAYA SANKARA.

  8. The place of the episode seems to be wrong.Mahaperiyava was largely confined to Tamilnadu and Andhra in late sixties and early seventies when Madurai Mani Iyer passed away

  9. mukkaalamum aridhavar num mahaperiyavaa ..

  10. Excellent, as usual, with MahaPeriva…

Leave a Reply to sundarCancel reply

%d bloggers like this: